கிரீடம் சூட்டும் கர்த்தர்

1. ஜீவ கிரீடம்
யாக்கோபு 1:12  சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில்  அன்புகூறுகிறவர் களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். 
வெளிப். 2:10  நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

2. வாடாத கிரீடம்
1பேதுரு 5:4 (1-4)  மந்தைக்கு மாதிரிகளாக கண்காணிப்பு செய்யுங்கள். அப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப் படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.

3. நீதியின் கிரீடம்
2தீமோத்தேயு 4:8 (7-8)  இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டடிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; 

4. பரிசுத்த கிரீடம்
லேவியராகமம் 8:9 (1-9)  அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான்.

5. பொற் கிரீடம்
சங்கீதம் 21:3 (1-7)  உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர் கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்

6. மகிமையான கிரீடம்
நீதிமொழிகள் 4:9 (1-10)  அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தைச் சூட்டும்

7. அலங்காரமான கிரீடம்
ஏசாயா 62:3 (1-8)  கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும் உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download