ரூத் அதிகாரம் 2- நுட்பநோக்கு விளக்கவுரை

அதிகாரம் 2: ரூத் போஸை சந்தித்தார் (2: 1–23)

நகோமிக்கு நெருங்கின உறவின் முறையான ஒருவர் இருந்தார், சில வேதாகம மொழிபெயர்ப்புகளில் “கின்ஸ்மேன்” (ஆதரிக்கிர சுதந்திரவாளி) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது, அவருடையபெயர் போவாஸ். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, எலிமெலேக்கு மற்றும் நகோமி வேறு தேசத்தில் குடியேறத் தீர்மானித்தனர், அதே நேரத்தில் போவாஸ் பெத்லகேமில் இருந்தார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நகோமி வறுமையில் இருந்தார், ஆனால் போவாஸ் ஒரு பணக்காரர் ஆனார். பத்து ஆண்டுகளில், பெத்லகேம் மக்கள் அழியவில்லை, உண்மையில் அவர்கள் தேவனால் போஷிக்கப்பட்டனர்.

போவாஸின் வயலில் ரூத் கதிர்பொறுக்கினாள் (ரூத் 2: 2-3)

அறுவடை நடக்கும் வயலில் ரூத் கதிர் சேகரிக்க சென்றார். ரூத் முன்முயற்சி எடுத்து வாய்ப்புகளைத் தேடத்தொடங்கினார். மோசேயின் நியாயப்பிரமாணம், விவசாயிகள் தாராளமாக நிலத்தை முழுமையாக அறுவடை செய்யாமல் சிலவற்றை விட்டுவிட வேண்டும், ஏழைகள் வயலுக்குச் சென்று சேகரிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. (லேவியராகமம் 19: 9-10)

போவாஸ் ரூத்தைப் பற்றிஅறிந்துகொள்கிறார் (ரூத் 2: 4-7)

போவாஸ் தனது தொழிலாளர்களை வாழ்த்துகிறார்: "கர்த்தர் உங்களோடே இருப்பாராக."  இது ஒரு கனிவான, மரியாதையான மற்றும் ஆவிக்குறிய வாழ்த்து. மேற்பார்வையாளர் ரூத் வயலில் சேகரிக்க அனுமதி கேட்டதாக தெரிவித்தார். அது ரூத் ஒரு பெண்மணியாக,  அடக்கமாகவும், பணிவாகவும் இருப்பதைக் காட்டுகிறது. ரூத்துக்குப் சேகரிக்க உரிமை இருந்தது ஆனால் சேகரிக்க அனுமதி கேட்கிறாள். அவள் விடாமுயற்சியுடனும் கடின உழைப்புடனும் இருந்தாள், காலையிலிருந்து அவள் ஓய்வின்றி உழைத்தாள். அவளுடைய மாமியார் நகோமி அல்லது மேற்பார்வையாளர் அவளைக் கண்காணிக்கவில்லை. ஆனாலும் அவள் தன் வேலையை ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்தாள். ஆம், அவள் மேற்பார்வையாளரால் கண்கானிக்கப்பட்டார் என்பது போவாசுக்கு அவளது விடாமுயற்சி பற்றி அவர் ஒரு நல்ல அறிக்கையை கொடுத்ததிலிருந்து தெரிகிறது.

போவாஸின் இரக்கம் (ரூத் 2: 8-9)

போவாஸ் மற்றவர்களை நன்றாக நடத்தினார். போவாஸின் வயலில், ரூத் மூன்று வகையானஆதரவைப்பெறுவார்.

முதலில், அவள் மற்ற இளம் பெண்களுடன் வேலை செய்ய முடியும் அதனால் சிறந்த தோழமை கிடைக்கும்.

இரண்டாவதாக, போவாஸ் ஆண்களைத் தொடக்கூடாது என்று அறிவுறுத்தினார் அல்லது எச்சரித்தார். அவள் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பை அனுபவித்தாள்.

மூன்றாவதாக, போவாஸ், ரூத்தைத் தண்ணீர் குடிக்கவும் அவள் வேலை செய்யும் போது புத்துணர்ச்சி பெறவும் அனுமதிக்கப்பட்டார். 

நன்றியுடைய ரூத் (ரூத் 2: 10,13)

ரூத் தரையில் விழுந்து, அவள் ஒரு வெளிநாட்டவர் என்பதால், அந்தச் சலுகைக்குத் தகுதியில்லை என்று கூறினார். போவாஸ் ஏன் அவளை கவனிக்க வேண்டும்? கர்த்தர் அவளைக் கவனித்ததால், போவாஸ் அவளைக் கவனித்தார். அவள் அவனது வேலைக்காரர்களில் ஒருவன் அல்ல, தான் ஒரு வெளிநாட்டவர் என்று ரூத் போவாஸை நினைவூட்டினாள்.

ரூத்தின் புகழ் (ரூத் 2: 11-12)

போவாஸ் ரூத் பற்றிய அறிக்கைகளை கேட்டதாக கூறினார்.

முதலில், அவள் இஸ்ரவேலின்தேவன் மீது நம்பிக்கை வைத்தாள். இது ஒரு மோவாபிய ஸ்திரியின் விசுவாசத்தின் ஒரு சிறந்தபடியாகும்.

இரண்டாவதாக, அவள் தன் பூர்வீக நிலத்தை மறந்தாள் அல்லது விட்டுவிட்டாள்.

மூன்றாவதாக, அவள் தன் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டுவிட முடிவு செய்தாள்.

நான்கு, அவள் வேறொரு நாட்டில் அந்நியராக வாழ முடிவெடுத்தாள். இது ஒரு பெரிய விசுவாசக் கிரியை.

ஐந்து, அவள் நித்தியதேவனின் சிறகுகளில் பாதுகாப்பை நாடினாள். (சங்கீதம் 17: 8; 36: 7; 63: 7)

போவாஸின் இரக்கம் (ரூத் 2: 14-16)

அது மதிய உணவு நேரம், போவாஸ், தன்னுடனும் அறுவடை  செய்கிறவர்களுடனும் ரூத்தை உணவு உண்ண அழைத்தார். அவர் அப்பத்தையும், நனைத்துக்கொள்ள காடியையும் கொஞ்சம் வறுத்த தானியங்களையும் கொடுத்து இரக்கம் காட்டினார். ஐக்கியத்திற்கும், சாப்பாடு சாப்பிடவும் அழைக்கப்பட்டிருப்பது அவளுக்கு  ஒரு பெரிய ஊக்களிப்பதாகவும், அங்கீகாரமளிப்பதாகவும் இருந்தது. ரூத் நன்றியுடன், சிலவற்றை எடுத்துக்கொண்டார், ஆனால் அவரது மாமியார் நகோமிக்கு ஒரு பகுதியை வைத்திருந்தார். அவள் எல்லாவற்றையும் விழுங்கப் பேராசை கொள்ளவில்லை. போவாஸ் தனது அறுவடை செய்பவர்களுக்கு அவள் விரும்பும் இடத்தில் சேகரிக்க சுதந்திரம் கொடுக்கும்படி அறிவுறுத்தினார், மேலும் வேண்டுமென்றே சிலவற்றை சிந்தவிடும்படி அவர்களிடம் கேட்டார்

ரூத்தின் கடின உழைப்பு (ரூத் 2:17)

ரூத் ஒவ்வொரு தானியமாக சேகரிக்க வேண்டியிருந்தது ஏனென்றால் கதிர் அரிவாளைப் பயன்படுத்த முடியாது. அவள் கவனமாக 22 லிட்டர் நிறை வாற்கோதுமை எடுத்தாள். அதை அவள் நகோமிக்கு எடுத்துச் சென்றாள். 

நகோமி மகிழ்ச்சியடைந்து கர்த்தரைப் புகழ்ந்தார் (ரூத் 2: 18-23)

ரூத் வீடு திரும்பினார்.நடந்ததை அவள் தெரிவித்தபோது நகோமி மகிழ்ச்சியடைந்து, அவள் கர்த்தரைப் புகழ்ந்தார். சோர்வடைந்த நகோமி, கர்த்தர் தன்னை கைவிட்டதால்,அவளை சிறுமைப்படுத்தியதால் தனக்குக் கசப்பு ஏற்பட்டதாக கூறினார்; இப்போது கர்த்தரைப் புகழ்கிறார். (ரூத் 1: 20-21) உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் கர்த்தர் மறக்கவில்லை என்று அவர் கூறினார். நகோமி போவாஸை நெருங்கிய உறவினர் என்றும் மோசோயின் சட்டத்தின்படி ஆதரிக்கும் சுதந்திரவாளி என்றும் அடையாளம் காட்டினார். நகோமி ரூத்தை அதே வயலில் வேலை செய்ய அறிவுறுத்தினார். 



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Tamil Reference Bible Ruth

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download