நிபந்தனையற்ற அன்பு

ஒரு உளவியலாளர் ஒரு பல்கலைக்கழகத்தால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் நிபந்தனையற்ற அன்பின் பண்புகளை பட்டியலிட்டார்.  சுவாரஸ்யமாக, வேதாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள தேவனுக்குப் பொருந்தக்கூடிய ஒரு பட்டியலாக அது காணப்படுகிறது.  தேவ அன்பின் அகலத்தையும், நீளத்தையும், ஆழத்தையும் புரிந்துகொள்ள பவுல் நமக்கு சவால் விடுகிறார் (எபேசியர் 3:18).

பச்சாதாபம்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்து மனிதன் அனுபவிக்கக்கூடிய அனைத்தையும் சகித்துக்கொண்டார்.  எனவே, துன்பத்தை அனுபவிக்கும் மனிதர்களிடம் அவர் அனுதாபம் காட்டுகிறார் (எபிரெயர் 4:14-16).

 மற்றவர்களின் சந்தோஷத்திற்கு முன்னுரிமை:
விசுவாசிகளுக்கு அன்பையும், அமைதியையும், மகிழ்ச்சியையும், மன்னிப்பையும் பரிசாக வழங்குவதற்காக ஆண்டவர் இயேசு கல்வாரி சிலுவையில் மரித்தார்.  அவர் துன்மார்க்க மனிதர்களிடையே வாழ்ந்து, மாறுபாடான சூழலில், சித்திரவதையான துன்பங்களைச் சகித்து, ஒரு குற்றவாளியைப் போல சிலுவையில் மரித்தார், அதனால் மனிதகுலம் மீட்கப்பட்டது.

 மன்னிப்பு:
தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு தம்மைத் துன்புறுத்தியவர்களுக்காக மன்னிப்புக் கோரினார் (லூக்கா 23:34). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவரை விசுவாசிக்கிறவர்களைச் சுத்தப்படுத்துகிறது (1 யோவான் 1:7).

பாதிப்புக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள்:
மாம்சமாகுதல் ஒரு பெரிய அதிசயம்.  சிருஷ்டிகரான கர்த்தர், பாவம் நிறைந்த தம்முடைய சிருஷ்டிகளுக்கு மத்தியில் வசித்தார், அபரிமிதமான ஆவிக்குரிய வேதனையை தாங்கினார்.  கர்த்தராகிய ஆண்டவர் பசி, தாகம், சோர்வு, தூக்கம் போன்றவற்றை அனுபவித்தார்.  குமாரனாகிய இயேசு தானாக முன்வந்து ஜீவனைக் கொடுத்தார் (யோவான் 10:11).

 பொறுமை:
அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் பொறுமையோடு தன் வருகையை தாமதிக்கிறார் (2 பேதுரு 3:8-10). ஆம், தேவன் நீடிய பொறுமையுள்ளவர்,  இரக்கத்தில் மிகுதியானவர், மனிதர்கள் மனந்திரும்புவதற்குப் போதிய நேரத்தைக் கொடுக்கிறார் (எண்ணாகமம் 14:18).

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு:
உலகம் உருவாவதற்கு முன்பே தேவன் முதலில் நம்மை நேசித்தார்.  மனிதர்கள் நேசிக்கத் தயாராக இருக்க வேண்டும் அல்லது அதற்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் அவர்களை நேசித்தார்.  மனிதர்கள் பாவிகளாகவும், சத்துருக்களாகவும், கலகக்காரர்களாகவும், கீழ்ப்படியாதவர்களாகவும், பலவீனர்களாகவும் இருந்தாலும் தேவன் அவர்களை நேசித்தார் (ரோமர் 5:5-8).

வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு:
தேவன் தனது முழுமையான திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் மீட்டெடுக்கப்படுவதற்கு மனிதர்களை நேசிக்கிறார் மற்றும் தயாராக இருக்கிறார்.  சீஷர்களிடம் நல்ல கிரியைகளை அல்லது திட்டங்களை அல்லது தரிசனங்களைத் தொடங்கியவர் அதை முழுமைக்குக் கொண்டு வருவார் (பிலிப்பியர் 1:6).

தங்கள் தனித்துவத்தைப் பேணுகிறார்கள்:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒரு கன்னிப் பெண்ணின் வயிற்றில் பிறந்தார், நூறு சதவீதம் கடவுள், நூறு சதவீதம் மனிதர் அவர்.  தேவனின் பரிசுத்த குமாரன் பாவம் நிறைந்த மனித இனத்தாலோ அல்லது சபிக்கப்பட்ட உலகத்தாலோ தீட்டுப்படுத்தப்படவில்லை அல்லது கெடுக்கப்படவில்லை.

தேவனின் நிபந்தனையற்ற அன்பின் ஆழம் எனக்குப் புரிகிறதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download