காலியாக இறக்கவா?

உலகில் செல்வம் நிறைந்த நிலம் எது என்று கேட்க்கப்பட்டபோது; சிலர் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கங்கள் என்றார்கள். கருத்தரங்குத் தலைவர் கூறினார்: "இல்லை அது கல்லறை. ஆம், ஏனென்றால் லட்சக்கணக்கான மக்கள், வெளிச்சத்திற்கு வராத அல்லது பிறருக்கு நன்மை செய்யாத பல மதிப்புமிக்க யோசனைகளை அவர்கள் சுமந்து கொண்டு பிரிந்து / இறந்து போனதால், , அதுவே உலகின் செல்வங்கள் நிறைந்த நிலம்." இந்த உரையாடலால் ஈர்க்கப்பட்டு, டோட் ஹென்றி ஒரு புத்தகத்தை எழுதினார்: “காலியாக மரணியுங்கள்: உங்கள் சிறந்த வேலையை தினமும் கட்டவிழ்த்து விடுங்கள்” (Die Empty: Unleash Your Best Work Everyday). அவர் கூறுகிறார்: “உங்கள் சிறந்த வேலையை உங்களுக்குள் வைத்துக்கொண்டு உங்கள் கல்லறைக்குச் செல்லாதீர்கள். காலியாக இறப்பதைத் தேர்ந்தெடுங்கள்." வேதாகமக் கண்ணோட்டத்தைப் பெறுவது நல்லது.

பாவத்தில் இறத்தல்: தங்கள் பாவங்களில் இறக்கும் மக்கள் உள்ளனர். (யோவான் 8:24) தாங்கள் பாவிகள் என்பதை ஒப்புக் கொள்ள விரும்பாத பெருமைக்காரர்கள், கர்த்தராகிய இயேசு மட்டுமே இரட்சகர் என்ற உண்மையைப் புறக்கணித்து, இரட்சிப்பின் தங்கள் சொந்த வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்கள் பாவம் நிறைந்த எலும்புகளுடன் கல்லறைகளில் இருப்பார்கள். (யோபு 20:11)

தாலந்துகளைப் புதைத்தல்: துரதிர்ஷ்டவசமாக, பலர் தங்கள் தாலந்துகள், வரங்கள், திறமைகள், அறிவு மற்றும் வளங்களை பயன்படுத்துவதற்குப் பதிலாக,  தாலந்துகளின் உவமையில், ஒரு தாலந்தைப் பெற்ற மனிதனைப் போல புதைக்கிறார்கள். (மத்தேயு 25:14-30) மரணத்தில், அவர்கள் நல்ல நேரத்தில் பயன்படுத்த மறுத்தவைகளோடு புதைக்கப்படுகிறார்கள்.

பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்: உலகில், மக்கள் தங்கள் திறமைகளை, தேவனின் நோக்கத்தை கணக்கிடாமல், சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம் சீஷர்களுக்கு பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமிக்கக் கற்றுக் கொடுத்தார். (மத்தேயு 6:19-21) சாதாரண பணத்தின் மூலம் பரலோக நண்பர்களைச் சம்பாதியுங்கள். (லூக்கா 16:9-11) மேலும் பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்க்கும் வகையில், மற்றவர்களை ஆசீர்வதிக்க திறமைகள், வரங்கள், வளங்கள், மரபுவழிப் பெற்றவை, அறிவு, ஞானம், செல்வாக்கு மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்துங்கள்.

மரணம் ஆதாயம்: கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்று பவுல் அழகாகக் கூறுகிறார். (பிலிப்பியர் 1:21) ஒரு நபர் கிறிஸ்துவை அறிந்து, அவருடைய விருப்பத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றினால் வாழ்க்கை அர்த்தமுள்ளது. கர்த்தரின் நோக்கம் நிறைவேறும் போது, ஒரு விசுவாசிக்கு, அவன்/அவள் அவருடன் என்றென்றும் வாழ்வதால் மரணம் ஆதாயமாக கருதப்படுகிறது.

மரணம் ஒரு வெற்றி: மனிதர்களுக்கு கடைசி சத்துரு மரணம். இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களால் மரணம் வெற்றியாக விழுங்கப்படுகிறது. (I கொரிந்தியர் 15:26, 54-55)

அவருடைய ராஜ்யத்திற்காக எல்லா வளங்களையும் நான் உகந்த முறையில் பயன்படுத்துகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download