மத்தேயு 25:14-30

25:14 அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்தியை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.
25:15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.
25:16 ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.
25:17 அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.
25:18 ஒரு தாலந்தை வாங்கினவன், போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
25:19 வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.
25:20 அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
25:21 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
25:22 இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.
25:23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
25:24 ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடின இருதயமுள்ள மனுஷன் என்று அறிவேன்.
25:25 ஆகையால், நான் பயந்துபோய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
25:26 அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
25:27 அப்படியானால் நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,
25:28 அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.
25:29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
25:30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.




Related Topics



பொறாமைக்கு ஒரு மாற்று மருந்து-Rev. Dr. J .N. மனோகரன்

F.B.  மேயர் மற்றும் கேம்ப்பெல் மோர்கன் சிறந்த சமகால ஊழியத் தலைவர்கள்.  மேயர் அவர்களின்  செய்திகளைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் கூடுவது வழக்கம்....
Read More




உக்கிராணக்காரர்களின் வளர்ச்சி-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எரிகோ நகரில் பத்து ராத்தல் உவமையைப் போதித்தார் (லூக்கா 19:11-27). இந்த உவமை தாலந்துகளின் உவமையிலிருந்து வேறுபட்டது (மத்தேயு...
Read More




காலியாக இறக்கவா?-Rev. Dr. J .N. மனோகரன்

உலகில் செல்வம் நிறைந்த நிலம் எது என்று கேட்க்கப்பட்டபோது; சிலர் எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகள் அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள வைரச் சுரங்கங்கள்...
Read More




அறியாமை வேண்டாமே-Rev. Dr. J .N. மனோகரன்

பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை, "முட்டாள்தனமாக இருக்காதேயுங்கள்" என்று கண்டிப்பதுண்டு.  அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு ஆசிரியராக தனது...
Read More




உஷாரான உக்கிராணக்காரர்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தங்கள் தலைவர்களை எகிப்திய பணி அதிகாரிகளுடன் ஒப்பிட்டார்.  அவர்கள் வளங்களை (மூலப்பொருட்கள்) கொடுக்கவில்லை,...
Read More



அன்றியும் , பரலோகராஜ்யம் , புறத்தேசத்துக்குப் , பிரயாணமாய்ப் , போகிற , ஒரு , மனுஷன் , தன் , ஊழியக்காரரை , அழைத்து , தன் , ஆஸ்தியை , அவர்கள் , வசமாய் , ஒப்புக்கொடுத்ததுபோல் , இருக்கிறது , மத்தேயு 25:14 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 25 TAMIL BIBLE , மத்தேயு 25 IN TAMIL , மத்தேயு 25 14 IN TAMIL , மத்தேயு 25 14 IN TAMIL BIBLE , மத்தேயு 25 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 25 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 25 TAMIL BIBLE , Matthew 25 IN TAMIL , Matthew 25 14 IN TAMIL , Matthew 25 14 IN TAMIL BIBLE . Matthew 25 IN ENGLISH ,