யெப்தாவின் மகள்

வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று சம்பவங்களில், கடினமான பகுதி ஒன்று யெப்தா மற்றும் அவரது மகள் பற்றியதாகும் (நியாயாதிபதிகள் 11:1-12:7). விசுவாசத்தின் நாயகர்களில் ஒருவராக யெப்தா குறிப்பிடப்படுவதால் இந்தக் கதை முக்கியமானது (எபிரெயர் 11:32-34).

பின்னணி முக்கியமில்லை: 
ஒரு நபரின் பின்னணியைப் பொருட்படுத்தாமல் தேவன் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.  யெப்தாவின் தாய் ஒரு வேசி, மேலும் அவனது தந்தை யோர்தானுக்கு அப்பால் உள்ள பகுதியைச் சேர்ந்த கீலேயாத் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  தாங்கள் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்ற மனப்பான்மையைக் கொண்ட உறவினர்கள், யெப்தாவை விரட்டி, வாரிசுரிமையை பறித்தனர்.  ஆனால் சில காலங்கள் கழித்து அவன் கீலேயாத் தலைவர்களாலே இஸ்ரவேல் ஜனங்களின் தலைவனாகவும் அதிபதியாகவும் நியமிக்கப்பட்டு ஆட்சி செய்தான்.

நிராகரிப்பு இறுதியானது அல்ல: 
அம்மோனியர்கள் கீலேயாத் ஜனங்களை அச்சுறுத்தியபோது, யெப்தாவை நிராகரித்த அதே மக்கள், அம்மோனியரை எதிர்த்துப் போரிட்டு தங்கள் தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். 

வீண் உறுதிமொழி:  
போருக்குச் செல்வதற்கு முன், அவன் தேவனிடம் ஜெபித்தான் மற்றும் “வெற்றிபெற்று திரும்பும்போது, எனது வீட்டிலிருந்து முதலில் வெளிவருகிறது எதுவோ அதை உமக்குத் தகன பலியாகக் கொடுப்பேன்” என்று வாக்குறுதி செய்தான் (நியாயாதிபதிகளின் புத்தகம் 11:31). ஆதங்கத்தில் மற்றும் முட்டாள்தனமான சத்தியங்களுக்கு அல்லது பொருத்தனைகளுக்கு எதிராக வேதாகமம் எச்சரிக்கிறது (பிரசங்கி 5:4-7). அவன் ஜெபித்தபடி தேவன் யெப்தாவுக்கு வெற்றியைத் தருகிறார்.  

கீழ்ப்படிதலுள்ள மகள்: 
வெற்றி பெற்ற தந்தை வீடு திரும்புகிறார். அவனது மகள் பாடியும், நடனமாடியும், தன் தந்தையின் வெற்றியைக் கொண்டாடியும் வெளியே வந்தாள். வெற்றி கசப்பாக மாறியது, அவன் மகளிடம் தனது பொருத்தனையைக் கூறுகிறான்.   ஈசாக்கைப் போலவே, அவள் கீழ்ப்படிந்தவள், பொருத்தனையை நிறைவேற்றும்படி அவனுடைய தந்தையிடம் கேட்டாள்.  ஆனால்  அதற்கு முன் மலைக்குச் சென்று தோழிகளுடன் சேர்ந்து புலம்புவதற்கும் துக்கப்படுவதற்கும் அவள் அனுமதி கோருகிறாள்.  குறிப்பிடத்தக்கது என்னவென்றால், யெப்தாவுக்கு இந்த ஒரே ஒரு பெண்ணைத் தவிர, வேறு ஆணோ பெண்ணோ வேறு குழந்தைகளோ இல்லை. 

வாழ்நாள் முழுவதும் கன்னி: 
தேவனுக்கு மனித பலிகள் தேவையில்லை.  ஆபிரகாம் ஈசாக்கை பலியிடுவதற்கு முன்பு ஒரு தூதரால் தடுக்கப்பட்டான் (ஆதியாகமம் 22:1-14). யோனத்தானைப் பலியாகக் கொடுப்பதிலிருந்து சவுலை மக்கள் தடுத்து நிறுத்தியதால், அத்தகைய பலி நிறுத்தப்பட்டது (1 சாமுவேல் 13). பிரதான ஆசாரியருக்கு அத்தகைய உறுதிமொழிகளை ரத்து செய்வதற்கும் மாற்று வழிகளை வழங்குவதற்கும் அதிகாரம் இருந்தது.   மனைவியாகவும் தாயாகவும் யெப்தாவின் மகளின் எதிர்காலம் கொல்லப்பட்டது, அவள் வாழ்நாள் முழுவதும் கன்னியாக யெகோவாவின் ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டாள்.  யெப்தாவிற்கு சந்ததி இல்லாமல் போய் விட்டது.

முக்கியமான பெண்கள்: 
ஒரு சமூகம் அல்லது குடும்பம் வாழ்வதற்கு பெண்களின் வாழ்க்கை முக்கியமானது, அத்தியாவசியமானது மற்றும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, அவரது மகளின் மரணம் ஒரு வியத்தகு வடிவத்தில், தலைமையின் ஆபத்துகளை பிரதிபலிக்கிறது.  மேலும் இச்சம்பவம் பெண்களின் ஆவிக்குரிய வாழ்வை பலமாக நிரூபிக்கிறது.

தேவன் என்னைப் பயன்படுத்த முடியும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா, என் பொருத்தனைகளில் அல்லது என் வாயின்வார்த்தைகளில் கவனமாக இருக்க முடியுமா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download