கிறிஸ்து பிறந்தபோது துதித்தவர்கள்

1. தேவதூதர்கள் துதித்தார்கள் 
லூக்கா 2:14 (13-14) உடனே பரமசேனையின் திரள் அந்தத் தூதனோடே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்

2. மேய்ப்பர்கள் துதித்தார்கள் 
லூக்கா 2:16,20 (15-20) மேய்ப்பர்கள் தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்... தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப்போனார்கள்

3. சாஸ்திரிகள் துதித்தார்கள் 
மத்தேயு 2:10,11(1-12) அவர்கள் (சாஸ்திரிகள்) அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்கு காணிக்கை...

4. மரியாள் துதித்தாள் 
லூக்கா 1:46(46-56) (மரியாள்)என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத் துகிறது. என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது

5. சிமியோன் துதித்தான் 
லூக்கா 2:28,29(25-33) (சிமியோன்) அவர் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்.

6. அன்னாள் துதித்தாள் 
லூக்கா 2:38(36-38) (அன்னாள்) அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download