இயேசு எதற்காக வந்தார்?

1. பாவிகளை மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தார்
மத்தேயு 9:13; மாற்கு 2:17;  லூக்கா 5:32 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்... நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்பு கிறதற்கே அழைக்க வந்தேன் என்றார்.
லூக்கா 15:7,10 மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று சொல்லுகிறேன். 
அப்போஸ்தலர் 5:31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவ மன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்ச கராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.    

2. நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கே வந்தார்
மத்தேயு 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கத்தரிசனங்களை யானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
அப்போஸ்தலர் 3:18 கிறிஸ்து பாடபடவேண்டுமென்று தேவன் தம் முடைய தீர்க்கத்தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்த வைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.  

3. பிதாவின் சித்தத்தின்படி செய்யவே வந்தார்
யோவான் 6:38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவரு டைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்தில் இருந்து இறங்கி வந்தேன்
மத்தேயு 26:39; மாற்கு 14:36; லூக்கா 22:42 பிதாவே, உமக்குச் சித்த மானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 
யோவான் 4:32-34 அதற்கு இயேசு: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download