கர்த்தர் சொல்ல ஆகும், கட்டளையிட நிற்கும்

சங்கீதம் 33:9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
ஏசாயா 48:12-13 என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.

1. இடியும் மழையும் நின்றது 
யாத்திராகமம் 9:29-34  மோசே பார்வோனை நோக்கி: நான் பட்ட ணத்தில் இருந்து புறப்பட்டுவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்று போகும்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர். மோசே தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக் கமும் கல் மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது.

2. காற்றும் மேகமும் நின்றது 
யாத்திராகமம் 14:19 இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவ தூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
மத்தேயு 8:23-27  இயேசு: அற்பவிசுவாசிகளே, ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று

3. சமுத்திரமும் நதியும் நின்றது 
யாத்திராகமம் 14:21-22 மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி னான்; அப்பொழுது கர்த்தர் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.
யோசுவா 3:13-17 ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே... கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று.
2இராஜாக்கள் 2:8,14 எலியாவும் எலிசாவும் தங்கள் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தார்கள்; அது இருபக்கமாகப் பிரிந்தது

4. சூரியனும் சந்திரனும் நின்றது 
யோசுவா 10:12-14 ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது... அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது. 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download