கர்த்தருடைய வார்த்தைகள்

1. வார்த்தைகள் ஒழிவதில்லை 
மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத் தில் உள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது  
மத்தேயு 24:35; மாற்கு 13:31; லூக்கா 21:33; எரேமியா 18:18 

2. வார்த்தைகள் திரும்புவதில்லை 
ஏசாயா 55:10,11 மாரியும் உறைந்த மழையும் வானத்தில் இருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து ஆகாரத்தைக் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயில் இருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து... 
3. வார்த்தைகள் நீங்குவதில்லை 
ஏசாயா 59:21 உன்மேல் இருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயில் இருந்தும், உன் சந்ததியின் வாயில் இருந்தும் நீங்குவதில்லை யென்று கர்த்தர் சொல்லுகிறார்; 

4. வார்த்தைகள் தாமதிப்பதில்லை 
எசேக்கியேல் 12:28 என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனி தாமதிப்பதில்லை யென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும்...

5. வார்த்தைகள் குறைவதில்லை 
எரேமியா 26:2 நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே உபாகமம் 4:2; உபாகமம் 12:32; நீதிமொழிகள் 30:6

6. வார்த்தைகள் தவறிபோகவில்லை 
யோசுவா 23:14, 1இராஜாக்கள் 8:56 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிபோகவில்லை... அவைகளெல்லாம் நிறைவேறிற்று.

7. வார்த்தைகள் விழுந்துபோகவில்லை 
1சாமுவேல் 3:19; 2இராஜாக்கள் 10:10 அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோகவிடவில்லை

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download