இவைகளையும் கர்த்தர் பயன்படுத்தினார்

1. கர்த்தர் கழுதையைப் பயன்படுத்தினார்
எண்ணாகமம் 22:28,31(20-34) இஸ்ரவேலை சபிக்க பாலாக் ராஜாவின் வார்த்தை யைக்கேட்டு, பிலேயாம் கழுதையின்மேல் சேனங்கட்டி போகிறபொழுது கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்... 
மத்தேயு 21:1-11;சகரியா 9:9 இயேசுகிறிஸ்து ராஜாவாய் கழுதையின் மேல் ஏறி பவனி வந்தார்.

2. கர்த்தர் காகத்தைப் பயன்படுத்தினார் 
1இராஜாக்கள் 17:1-6 எலியாவை போஷிக்க கர்த்தர் காகங்களைப் பயன் படுத்தினார்  அவைகள்  அப்பமும்  இறைச்சியும்  அவனுக்குத்  தந்தது. 
ஆதியாகமம் 8:7 நோவா ஜலம் வற்றியதைப் பார்க்க காகத்தை வெளியே விட்டு பயன்படுத்தினார்.

3. கர்த்தர் மீனைப் பயன்படுத்தினார் 
யோனா 1:17; 2:10 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைப் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்று நாள் இருந்தான். கர்தர் அவனைக் காப்பாற்றினார் 
மத்தேயு 17:24-27 வரிப்பணம் கட்டுவதற்காக இயேசு பேதுருவை நோக்கி: நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதன் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் கொடு என்றார். 

4. கர்த்தர் புறாவைப் பயன்படுத்தினார்
மாற்கு 1:10; மத்தேயு 3:16 லூக்கா 3:22; யோவான் 1:32 இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, ஜலத்தில் இருந்து கரையேறினவுடனே, இதோ, ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார் 
ஆதியாகமம் 8:8-12 நோவா புறாவைக் கொண்டு ஜலம் வற்றியதா என்று பார்ப்பதற்கு பயன்படுத்தினார் 

5. கர்த்தர் சேவலைப் பயன்படுத்தினார்
மத்தேயு 26:33-35,69-75 பேதுரு இயேசுவுக்கு பிரதியுத்தரமாக: உமது நாமத்தினிமித் தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் அடையேன் என்றார். இயேசு அவனை நோக்கி: சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, உனக்கு சொல்லுகிறேன் என்றார். அப்படியே மறுத்தான்.

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download