யார் செழிப்பார்கள்?

1. நம்புகிறவன் செழிப்பான்
நீதிமொழிகள் 28:25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். 
(பேராசைக் கொண்டவன் சண்டை மூளச்செய்வான்; ஆண்டவரை நம்பியிப்பவர் நலமுடன் வாழ்வார்)
எரேமியா 17:7,8  கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பவன் செழிப்பான்
சங்கீதம் 1:1-3  கர்த்தருடைய வேதத்தை இரவும்பகலும் தியானிப்பவன் செழிப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

2. நீதிமான் செழிப்பான்
சங்கீதம் 92:12 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபலோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
சங்கீதம் 72:7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

3. நாட்டப்பட்டவன் செழிப்பான்
சங்கீதம் 92:13 (13-15) கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிரகாரங்களில் செழித்திருப்பார்கள்.
(ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்)

4. குணமுள்ளவன் செழிப்பான்
நீதிமொழிகள் 11:25 (24-31) உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் ( ஈகை குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்)

5. செம்மையானவன் செழிப்பான்
நீதிமொழிகள் 14:11  துன்மார்க்கருடைய வீடு அழியும்; செம்மை யானவனுடைய கூடாரமோ செழிக்கும்
(பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்)

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download