இரண்டு சவுல்களின் கதை

பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த சவுல் என்ற பெயருடைய இரண்டு நபர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (1 சாமுவேல் 9:21; பிலிப்பியர் 3:5). முதல் சவுல் இஸ்ரவேலின் பூமிக்குரிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதில் தோல்வியடைந்தான்.  இரண்டாவது சவுல் தேவ ராஜ்யத்தை நிறுவும் பணியில் இருந்தான்.  நிச்சயமாக, சவுலாகிய பவுல் நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும், சீஷர்களை உருவாக்குவதிலும், சபைகளை நிறுவுவதிலும், தலைவர்களை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றான்.

ராஜா சவுல்:
ஏறக்குறைய நானூறு ஆண்டுகள் நியாயாதிபதிகளுக்குப் பிறகு, இஸ்ரவேலர் மகிழ்ச்சியாக இருக்கவில்லை.  மற்ற நாடுகளைப் போலவே, அவர்கள் ஒரு ராஜாவைக் கொண்டிருக்க விரும்பினர்: அது நியமிக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது தேர்ந்தெடுக்கப்படலாம். ஜனங்கள் ராஜாவாக தேவன் இருப்பதை நிராகரிக்கின்றனரே என்று சாமுவேல் தீர்க்கதரிசி வருத்தப்பட்டார். "அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்" (1 சாமுவேல் 8:4-9) என்றார். ஆகையால் வருத்தப்பட வேண்டாம், அப்படி வருத்தப்பட வேண்டிய நபர் என்றால் அது தேவன் மாத்திரமே. பின்பதாக ஒரு ராஜாவை நியமிக்க சாமுவேலை தேவன் வழிநடத்தினார்.  தொலைந்து போன கழுதைகளை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பென்யமீனான சவுல், இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்த அழைக்கப்பட்டான். அவன் உடல் தகுதி, உயரம் என இஸ்ரவேல் தேசத்தை வழிநடத்த தகுதி இருந்தும் தோல்வியடைந்தான்.  அவன் கீழ்ப்படியாமல் தேவனுக்கு எதிராக கலகம் செய்தான், மேலும் தேசம் வலுவாக இல்லை (1 சாமுவேல் 15: 22-23). அவன் கோலியாத்துடன் சண்டையிட விரும்பவில்லை, ஆனால் தாவீதுடன் சண்டையிடுவது தேவையற்றது மற்றும் இஸ்ரவேலை ஒரு பெரிய தேசமாக மாற்ற அவனுக்கு கொஞ்ச காலங்கள் அல்லது வாய்ப்பு  கிடைத்தது, ஆனால் பயன்படுத்தவில்லை. 

உபத்திரவப்படுத்தும் சவுல் அப்போஸ்தலன் ஆனான்:
நியாயப்பிரமாணத்தில் வைராக்கியமுள்ள சவுல், கர்த்தருடைய சீஷர்களைத் துன்புறுத்தினான். அவன் பிரதான ஆசாரியனிடமிருந்து கட்டளைகளைப் பெறுவதற்கும், விசுவாசிகளை துன்புறுத்துவதற்கும் நகரம் விட்டு நகரம் சென்றான். தமஸ்கு பயணத்தின் போது, ​​அவன் ஆண்டவரை சந்தித்தான், அவனது வாழ்க்கை தலைகீழாக மாறியது. இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு குருடாக்கப்பட்ட ஜனங்களின் கண்களைத் திறந்து, அவர்களை விடுவித்து, தேவ ராஜ்யத்திற்குள் கொண்டு வருவதன் மூலம் தேவ ராஜ்யத்தை நிறுவ அவன் அழைக்கப்பட்டான்.  ரோமானியப் பேரரசின் மூலை முடுக்கெல்லாம் சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் தரிசனமுள்ளவனான். அந்த பரலோக தரிசனத்திற்கு தாம் கீழ்ப்படியாமல் இல்லை என்று அவன் நம்பிக்கையுடன் கூற முடியும் (அப்போஸ்தலர் 26:16-19). 

தேவ சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதல் ஒரு முழுமையான தேவை என நாம் உணர்கிறோமா. 

Author: Rev. Dr. J. N. Manokara



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download