கர்த்தரே நமக்கு துணை

சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

1. உத்தமனுக்குக் கர்த்தர் துணை
2நாளாகமம் 19:11(1-11) நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
2நாளாகமம் 14:11 கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்ற வனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; 
2தீமோத்தேயு 4:17 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும் புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற் காகவும், என்னைப் பலப்படுத்தினார்

2. நம்புகிறவனுக்குக் கர்த்தர் துணை
சங்கீதம் 115:11 (9-11) இஸ்ரவேலே, ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமாயிருக்கிறார். கர்த்தரை நம்புங்கள்
சங்கீதம் 146:5 கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 63:7 நீர் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்
சங்கீதம் 94:17 கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.

3. பயப்படுகிறவனுக்குக் கர்த்தர் துணை
சங்கீதம் 115:11 (9-11) கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமாயிருக்கிறார்.
ஏசாயா 41:13,14 கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்.
ஏசாயா 50:7-9 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார் ஆகையால் நான் வெட்கப்படேன்... 
ஏசாயா 44:2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும் உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர்

Author: Rev. M. Arul Doss  


கர்த்தர் நமக்குத் துணை

ஏசாயா 41:13-14; ஏசாயா 50:7-9 உன் தேவனாகிய கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்கு துணைநிற்கிறேன்,
சங்கீதம் 40:17; 70:5 தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவரும்...
சங்கீதம் 46:1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர் 

1. கர்த்தரை நம்புங்கள் அவரே நமக்குத் துணை
சங்கீதம் 115:9-11 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.
சங்கீதம் 146:5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கிறவன் பாக்கியவான்
சங்கீதம் 63:7 நீர் துணையாயிருந்ததினால்... 
சங்கீதம் 94:17 கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால்... 

2. கர்த்தரைச் சார்ந்திருங்கள் அவரே நமக்குத் துணை
2நாளாகமம் 14:11 ஆசா: எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்
2நாளாகமம் 19:1-11 யெகூ, யோசாபாத் ராஜாவை சந்தித்து சொன்னது: நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

3. கர்த்தருக்குக் காத்திருங்கள் அவரே நமக்குத் துணை
சங்கீதம் 33:18-20 தமக்குப்பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர் களின் ஆத்துமாக் களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்

4. கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் அவரே நமக்குத் துணை
2தீமோத்தேயு 4:17-18 பவுல்: கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறை வேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயில் இருந்தும் இரட்சிக்கப்பட்டேன். 

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download