ஞானத்தைத் தேடிய சேபாவின் ராஜஸ்திரீ

சாலொமோனின் ஞானத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு தனிச்சிறப்புடைய ராணி, கற்றுக்கொள்வதற்காக அவரைச் சந்தித்தாள், ஆசீர்வதிக்கப்பட்டாள் (1 இராஜாக்கள் 10:1-13; 2 நாளாகமம் 9:1-12; மத்தேயு 12:42)

1) சிறந்த தகவல்:
சாலொமோன் ராஜாவின் ஞானத்தைப் பற்றிய கீர்த்தி உலகம் முழுவதும் அறியப்பட்டது மற்றும் மன்னர்கள் அவரைப் பற்றிக் கேட்க அவையோரை நாடினர். இப்போது ஞானம், வாழ்க்கை, பலி, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல் ஆகியவற்றை எடுத்துரைக்கும் பெரிய நற்செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படுகிறது.

2) சிறந்த பயணம்:
எருசலேம் பயணம் சுமார் 1500 மைல்கள்.  நான்கரை டன் தங்கம், கந்தவர்க்கங்கள் மற்றும் விலையுயர்ந்த இரத்தினங்களையும் சுமந்து கொண்டு இவ்வளவு தூரம் பயணம் செய்வது என்பது அதிக ஆபத்தானதாகவும் துணிச்சலான செயலாகவும் இருந்தது. கர்த்தராகிய இயேசு நம்மை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.

3) சிறந்த உரையாடல்கள்:
மரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் மற்றும் ஊர்வன; நீதிமொழிகள், பாடல்கள் மற்றும் ஆவிக்குரிய வாழ்வு என சேபாவின் ராஜஸ்திரீக்கு பல கேள்விகள் இருந்தன. தேவன் தொடர்ந்து தேவ வார்த்தையின் மூலம் நம்முடன் பேசுகிறார், விசுவாசிகள் ஜெபத்தின் மூலம் அவருடன் பேச முடியும்.

4) சிறந்த பரிசுகள்:
அவள் நான்கரை டன் தங்கம், நறுமணப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பொன் இரத்தினங்கள் கொண்டு வந்தாள். ஆண்டவர் இயேசு பிறந்தபோது பரிசுகளைக் கொண்டு வந்த ஞானிகளைப் போல் இருந்தது (மத்தேயு 2:11). இப்போது விசுவாசிகள் தங்களை ஜீவனுள்ள பலியாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.

5) மகிமையும் செல்வமும்:
சாலொமோனின் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் ஞானம் வெளிப்படுத்தப்பட்டது. சேபாவின் ராஜஸ்திரீ பதின்மூன்று ஆண்டுகளாகக் கட்டப்பட்ட வீட்டின் (அரமனையின்) கட்டிடக்கலை (1இராஜாக்கள் 7:1), அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு தன்னைக் கவர்ந்தவற்றைப் பட்டியலிடலாம். விசுவாசிகளுக்கு, கர்த்தராகிய இயேசு ராஜாக்களின் ராஜா, பிரபுக்களின் பிரபு மற்றும் அவருடைய அன்பு, செல்வம், கிருபை, ஞானம் போன்ற அவரது பண்புக்கூறுகள் புரிந்துகொள்ள முடியாதவை.

6) பெருந்தன்மையான சாலொமோன்:
சாலொமோன் அவளுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தது மட்டுமல்லாமல், தாராளமாக பரிசையும் கொடுத்தான். கர்த்தராகிய இயேசு இந்த வாழ்விலும் நித்திய வாழ்விலும் நித்திய ஐசுவரியத்துடன் அர்த்தத்தையும், நோக்கத்தையும், திட்டத்தையும் தருகிறார்.

 7) பெரிய பாராட்டு:
சேபாவின் ராஜஸ்திரீ ஞானத்தைத் தேடினாள், அனைவரும் சத்தியத்தைத் தேட வேண்டும். பிதாவின் முன் ஆண்டவர் தன் பிள்ளைகளின் பெயர்களை அறிக்கை பண்ணுவார் (1 இராஜாக்கள் 10:1-13; 2 நாளாகமம் 9:1-12; மத்தேயு 12:42). 

நான் ஞானத்தையும் சத்தியத்தையும் விறைப்பாக தேடுகிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download