தேவனின் சேவையில் பங்கு கொள்

இந்திய நிர்வாக சேவை (ஐஏஎஸ்) அதிகாரிகள் தங்கள் நியமனம், தேசத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.  அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் மாநில அரசின் தலைமை செயலாளராகவோ அல்லது பிரதமரின் முதன்மை செயலாளராகவோ ஆக மாட்டார்கள்.  இருப்பினும், ஒவ்வொரு அதிகாரியும் அரசாங்கத்தின் சொத்தாக கருதப்படுகிறார்கள்.  அனைத்து அதிகாரிகளும் அவர்களது நிபுணத்துவம், அனுபவம் மற்றும் தேவைகளின் அடிப்படையில் தங்களுக்குத் தகுந்த அளவிலான சேவையைக் கொண்டுள்ளனர்.  அனைத்து விசுவாசிகளும், ஆண்களும் பெண்களும் தங்கள் வயது, அனுபவம், கல்வி மற்றும் சூழல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தேவனின் சேவையில் (IGS) உள்ளனர்.

ஜெபம்:
அனைத்து விசுவாசிகளும் ஜெபிக்கவும் ஊழியத்தில் பங்கு கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்" (லூக்கா 10:2).   புதியதாக அறுவடை செய்பவர்களுக்காகவும், ஏற்கனவே  கடின உழைப்பை கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்காவும் ஜெபம் செய்யுங்கள்.

 சாட்சி:
 மீண்டும் பிறந்த தேவ பிள்ளைகள் அனைவரும் உலகில் அவருடைய சாட்சிகளே (அப்போஸ்தலர் 1:8). அவர்களின் வார்த்தைகள், செயல்கள், நடத்தை, அணுகுமுறை, உறவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை தேவனின் அன்பு, ஞானம், கிருபை மற்றும் நற்குணம் ஆகியவற்றை பிரதிபலிக்க வேண்டும்.  வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் உலகின் ஒளி மற்றும் பூமியின் உப்பு என்பதை மறக்கக் கூடாது (மத்தேயு 5:14-16).

சீஷர்களை உருவாக்குதல்:
சீஷர்கள் சீஷர்களை உருவாக்கும் சீஷர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் (மத்தேயு 28:18-20). எல்லா மனிதர்களும் மனந்திரும்பி அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தேவனின் விருப்பம் (2 பேதுரு 3:9). "இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்" (வெளிப்படுத்தின விசேஷம் 7:9). சீஷராக்குவது ஆசையாகவும், ஆர்வமாகவும், முன்னுரிமையாகவும், வாழ்க்கையின் நோக்கமாகவும் இருக்க வேண்டும்.

கீழ்ப்படிய கற்றுக்கொள்ளல்:
சீஷர்களை உருவாக்குவது மட்டும் போதாது, கீழ்ப்படிய கற்றுக் கொடுப்பதும் அவசியம். சீஷர்கள் கீழ்ப்படிதலுள்ள சீஷர்களாக இருக்க வேண்டும்.  சீஷத்துவத்தில் சிறந்து விளங்க அவர்களை கற்பித்தல், பயிற்றுவித்தல் மற்றும் ஆயத்தப்படுத்துதல் அனைத்தும் விசுவாசிகளின் பணியாகும்.  இது வீட்டில், குழந்தைகளுடன் தொடங்கி, அண்டை சமூகங்களுக்கும், முழு தேசத்திற்கும் பரவுகிறது.

நன்மை செய்தல்:
பூமியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியம் நன்மை செய்வதாக இருந்தது (அப்போஸ்தலர் 10:38). எல்லாவிதமான நற்கிரியைகளையும் செய்வதற்கு சீஷர்கள் ஆயத்தமானவர்கள் (2 தீமோத்தேயு 3:15-17).‌ விசுவாசம் உள்ளவர்கள், மக்களின் துன்பத்தைப் போக்கவும், சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும் நல்ல பணிகளைச் செய்கிறார்கள்.  "ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது" (யாக்கோபு 2:26).  ஆம், செயலில் இருக்க வேண்டும் அல்லவா.

 நான் தேவனின் சேவையில் பணியாற்றுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download