யோசுவாவின் தலைமைக் குறைபாடுகள்

யோசுவா இஸ்ரவேல் வரலாற்றில் ஒரு முக்கியமான தலைவராக இடம்பிடித்துள்ளான். அவன் மோசேயின் ஒரு தகுதியான வாரிசாக காணப்பட்டான். ஒரு போர்வீரனாகவும் உத்தியுடையவனாகவும் (மூலோபாயவாதி) இருந்து அவன் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்தின் பெரும் பகுதியை வென்றான்.  இப்படியெல்லாம் இருந்தும், அவன் பணியை நிறைவு செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். உண்மையில், அவனது தலைமைத்துவத்தில் மூன்று முக்கியமான குறைபாடுகள் இருந்தன.

1) கிபியோன் குடிகள்:
யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலர்கள் தங்களை அழிக்கப் போவதைக் கண்ட தேசத்தின் குடிகள் பயந்தார்கள். கிபியோனியர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பி, தாங்கள் தொலைதூர நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள விரும்புவதாகவும் காட்டிக் கொண்டனர்.  யோசுவா கர்த்தருடைய ஆலோசனையைப் பெறாமல் அவர்களுடன் ஒப்பந்தம் செய்தான் (யோசுவா 9:14). உடன்படிக்கை பண்ணின பின்பு தான் அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். தங்கள் உயிருக்கு பயந்து அவர்கள் யோசுவாவை ஏமாற்றினர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.  சமாதான உடன்படிக்கையின் காரணமாக, வேறுவழியின்றி கிபியோனியர்கள் இஸ்ரவேலர்களிடையே வாழ விடப்பட்டனர்.

2) குழப்பமான முடிவு:
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை கைப்பற்றாததற்காக யோசுவா இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினான் மற்றும் கண்டித்தான்.  பின்னர் அவன் தேசத்தை ஆய்வு செய்ய உத்தரவிடுகிறான் மற்றும் ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் பகுதிகளை ஒதுக்குவதற்கான ஆவணங்களை உருவாக்குகிறான் (யோசுவா 18:1-4).  ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றுவதற்காக மற்ற கோத்திரங்களோடு  சண்டையிட யோர்தானைக் கடந்தனர்.  இருப்பினும், முழு வாக்குத்தத்த தேசமும் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, யோசுவா அவர்களின் சகோதரர்களுக்கு ஓய்வு கொடுக்க முன்கூட்டியே முடிவு செய்தான்; மேலும் சண்டையிடும் மனிதர்களை கொள்ளையடிப்புடன் திருப்பி அனுப்பினான் (யோசுவா 22:1-9). ஆம், யோசுவா எந்த அடிப்படையில் அந்த முடிவை எடுத்தான் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 3) கலங்கின:
நீண்ட கால வழிநடத்துதலுக்குப் பிறகு, யோசுவா தனது காலம் முடிந்துவிட்டது என்பதில் உறுதியாக இருந்தான்.  அவன் சபை முழுவதையும் அழைத்து, நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அறிவுறுத்தினான்.  அவன் உடன்படிக்கையையும் புதுப்பித்தான். அனைவரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்  என வலியுறுத்தினான். அப்போது ஜனங்களும் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். பின்னர் யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு (வீட்டிற்கு) அனுப்பிவிட்டான் (யோசுவா 24:22-28). யோசுவா தனது வாரிசை அறிவிப்பான் என்று சபையில் இருந்த பலர் எதிர்பார்த்திருப்பார்கள். அவனது மறைவால் ஒட்டுமொத்த தேசமும் தலைவர் இல்லாமல் தவித்தது.

யோசுவா திறமையான படைத் தலைவன், எழுபது பெரியவர்கள்... போன்றவர்களைக் கொண்டிருந்த மோசேயைப் போலல்லாமல், யோசுவா தனிமையானவராகத் தெரிகிறது.

தவறுகள் மற்றும் குற்றங்களைத் தவிர்க்க நான் தேவனிடம் ஆலோசனை கேட்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download