நீதிமான்களுக்கான கிருபை

ஆபிரகாம் மற்றும் லோத் உட்பட பல வேதாகம ஹீரோக்கள் தேவனின் கிருபையை அனுபவித்தனர்.  ஆனால் நீதிமானாகிய லோத்து தன் மனைவி மற்றும் மகள்களுக்குக் கற்பித்துப் பயிற்றுவிக்காமல் அவர்களை இழந்தான்.

பாவம் நிறைந்த நகரங்கள்:
சோவர் முன்பு பேலா என்று அழைக்கப்பட்டது (ஆதியாகமம் 14:8).  இது பென்டாபோலிஸ் என்று அழைக்கப்படும் சமவெளியின் ஐந்து நகரங்களான  சோதோம், கொமோரா, சோவர், அத்மா, செபோயிம் ஆகியவற்றைக் குறிக்கும்.  இந்த நகரங்களின் கடுமையான பாவங்களின் காரணமாக தேவன் அவற்றை அழிக்க விரும்பினார் (ஆதியாகமம் 18:20). சோதோமின் பாவம் திமிர்பிடித்ததாகவும், அக்கறையற்றதாகவும், ஆகாரத் திரட்சியுமாக (உணவுக்கான முக்கியத்துவம்) இருந்தது (எசேக்கியேல் 16:49). சோவாரில் மோவாபின் மலைகளில் இருந்து சோலையை உருவாக்க தண்ணீர் வந்தது.  கீலேயாத்தின் தைலம், கருநீலம் மற்றும் பேரீச்சம்பழ மரங்கள் அங்கு வளர்ந்தன.  நோக்கம் இல்லாத ஐசுவரியம் பாவ செயல்களுக்கு பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

 ஆபிரகாமின் பரிந்துரை:
தேவன் பட்டணங்களை அழிப்பேன் என்று தேவன் வெளிப்படுத்தியபோது, ​​​​ஆபிரகாம் தேவனிடம் பரிந்துரைத்தார்.  நூறு நீதிமான்கள் இருந்தால் அந்த நகரத்தை அழித்து விடுவீரா என்று நீதியுள்ள தேவனிடம் முறையிடத் தொடங்கினார்.  பத்து நீதிமான்கள் இருந்தால் ஒரு நகரத்தை தேவன் அழிக்கமாட்டார் என்பதை ஆபிரகாம் புரிந்துகொண்டார்.

 ஆபிரகாமின் ஜெபம் கேட்கப்படல்:
 தேவன் சோதோமை அழிக்கும்போது, அவர் ஆபிரகாமின் ஜெபங்களை நினைவு கூர்ந்தார் (ஆதியாகமம் 19:29). அந்த நகரத்தில் பத்து நீதிமான்கள் இல்லாததால் அந்த நகரத்தை விட்டுவைக்க முடியவில்லை.  எனவே, அந்த நகரங்களை அழிக்கும் முன், தேவன் லோத்தையும் அவனுடைய குடும்பத்தையும் அங்கிருந்து வெளியேற்றினார்.

 லோத்தும் குடும்பமும் விடுவிக்கப்படல்:
லோத்தும், அவருடைய மனைவியும், இரண்டு மகள்களும் பாதுகாப்பாக ஓடிச் செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.  லோத்தின் மனைவி திரும்பி பார்த்ததால் உப்புத் தூணானாள்.  அவள் இதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் நகரத்தை பிரிக்க முடியவில்லை.

 லோத்தின் ஜெபம்:
அருகில் இருந்த சோவார் நகரத்தில் தான் தஞ்சம் புகவும் அது காப்பாற்றப்படும் லோத்  மன்றாடினான்.  நீதியுள்ள லோத்தின் காரணமாக, நகரம் காப்பாற்றப்பட்டது (2 பேதுரு 2:7).

 சபிக்கப்பட்ட தலைமுறை:
துரதிர்ஷ்டவசமாக, லோத்தின் மகள்கள் அவனைக் குடிக்கச் செய்தார்கள், பின்பு அவன் மூலம் "மூத்தவள் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். இளையவளும் ஒரு குமாரனைப்பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்" (ஆதியாகமம் 19:34‭-‬38). 

 சோவார் விடுபடல்:
 1712 B.C. இல் சோதோம் அழிக்கப்பட்டது, ஆனால் 1100 A.D. இல் சோவார் இருந்தது, அதாவது அது குறைந்தது 2,900 ஆண்டுகளுக்கு அழிக்கப்படாமல் இருந்தது.  ஆம், நகரத்தைப் பாதுகாப்பதாக தேவன் லோத்துக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேறியது. வாக்கு மாறாத தேவன் அல்லவா அவர்.

தேவனின் கிருபையை நான் மதிக்கிறேனா, என் குடும்பத்திற்கு கற்பிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download