வாருங்கள், கேளுங்கள், செய்யுங்கள்

லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, சீஷராக மாறுவதற்கான வழிமுறை கர்த்தராகிய இயேசுவால் விளக்கப்பட்டுள்ளது (லூக்கா 6:46-49). இந்த உவமை எல்லா மனிதர்களுக்கும் நுண்ணறிவை  அளிக்கிறது.

 கர்த்தாவே, கர்த்தாவே:
தேவனோடு ஒரு ஆழமான உறவு வேண்டுமென்றால் அவரிடம் நெருங்கி வர வேண்டும். தங்களை தாங்களே தூரப்படுத்திக் கொண்டு கண்ணீர் வடிக்கக் கூடாது. அனைவரையும் தன்னிடம் நெருங்கி வருமாறு தேவன் அழைக்கிறார்.  சிலரோ தாங்கள் கிறிஸ்துவோடு நெருக்கமானவர்கள் போல உலகத்திற்கு ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள், ஆனால் தேவன் அவர்களை ஒருக்காலும் உங்களை அறியவில்லை (மத்தேயு 7:22) என்பார். 

 வாருங்கள்:
கர்த்தராகிய இயேசு பாரமுள்ள அனைவரையும் அழைத்தார் (மத்தேயு 11:28). அவர்கள் பிரமிப்புடனும், நம்பிக்கையுடனும், ஆச்சரியத்துடனும் நெருங்கி வர வேண்டும். மோசே விரைந்து ஓடி விடாமல் இருக்க, பரிசுத்த ஸ்தலத்தில் தங்க வேண்டும் என்பதற்காக அவனது காலணிகள் அகற்ற கட்டளையிடப்பட்டது (யாத்திராகமம் 3:5). கேட்கவும், கவனிக்கவும் மற்றும் கற்றுக்கொள்ளும் நோக்கத்துடனும் மனதின் அமைப்பு இருக்க வேண்டும்.

 கேளுங்கள்:
கேட்பவர்கள் தீவிரமாகவும் கவனமாகவும் கேட்க வேண்டும்.  வெறும் வார்த்தைகளையோ அல்லது சொல்லாட்சியையோ அல்லது ஏதோ கடமைக்காக ஏனோ தானோ வென்று கேட்பது அல்ல, ஆனால் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது.  அந்த வார்த்தைகள் மனதையும் ஆத்துமாவையும் நிறைவு செய்ய அனுமதிக்க வேண்டும்; மேலும் கர்த்தருடைய வார்த்தை மனதைப் புதுப்பித்து  மனிதனை முழுமையாக புது சிருஷ்டியாக மாற்ற கவனமாக கேட்க வேண்டும் (ரோமர் 12:2). 

 செய்யுங்கள்:
கேட்பது மனப்பாடம் செய்வதற்காக அல்ல, செயல்படுவதற்காக.  கீழ்ப்படிதல் என்பது தேவனுடைய வார்த்தைக்கு பதிலளிப்பதன் இயல்பான விளைவாக இருக்க வேண்டும். யாக்கோபு சீஷர்களை வார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருக்காமல், வார்த்தையின்படி செய்பவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். "திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்" (யாக்கோபு 1:22-25). 

 ஞானம்:
 ஒரு சீஷன் எப்பொழுதும் ஞானமுள்ளவனாக இருப்பான், ஏனென்றால் அந்த நபர் தேவ வார்த்தையைக் கேட்பான், தேவனின் பண்புகளை அறிவான், தேவ சித்தத்தை அறிந்துகொள்வான், தேவ நோக்கத்தை நிறைவேற்றும் நபராக அவரைப் போல் வளர்கிறான். 

 அடித்தளம்:
 ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை மிகவும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.  அடித்தளம் என்பது கட்டிடத்தின் காணப்படாத பகுதி, ஆனால் மிக முக்கியமான அம்சமாகும்.  முழு வாழ்க்கை, அர்த்தம், நோக்கம், தரிசனம் மற்றும் முடிவுகள் ஒரு வலுவான அடித்தளத்தில் போடப்பட வேண்டும்.

 அசைக்க முடியாதது:
 மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவை அபூரண உலகில் மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்.  இருப்பினும், என்ன நேர்ந்தாலும் ஒரு சீஷரை தேவனிடமிருந்து பறிக்க முடியாது, ஏனெனில் அந்நபர் அசைக்க முடியாத தேவ ராஜ்யத்தைச் சேர்ந்தவர் (எபிரெயர் 12:28). தேவ சித்தத்தைச் செய்கிறவன் என்றென்றும் நிலைத்திருப்பான் (1 யோவான் 2:17). 

 என் வாழ்க்கை இந்த அடித்தளத்தில் கட்டப்பட்டதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download