பொறாமைக்கு ஒரு மாற்று மருந்து

F.B.  மேயர் மற்றும் கேம்ப்பெல் மோர்கன் சிறந்த சமகால ஊழியத் தலைவர்கள்.  மேயர் அவர்களின்  செய்திகளைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் கூடுவது வழக்கம். அப்போது கேம்ப்பெல் மோர்கனும் அந்த இடத்திற்கு வந்து பிரசங்கம் செய்ய ஆரம்பித்தார்.  படிப்படியாக, மேயரிடம் இருந்த கூட்டத்தில் பலர் மோர்கனின் செய்தியைக் கேட்கச் சென்றனர்.  அதனால் பொறாமையும், கோபமும் மற்றும் எரிச்சலும் மேயரை மூழ்கடித்தது.  ஆனால் இந்தப் பொறாமையிலிருந்தும் கசப்பிலிருந்தும் தன்னை விடுவிக்கும்படி அவர் தேவனிடம் ஜெபிக்க ஆரம்பித்தார்; மேலும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலின்படி, மேயர் மோர்கனின் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்றும், அவர் ஊழியம் செய்யும் இடம் ஜனங்களால் நிரப்பப்பட வேண்டும் என்றும், ஒருவேளை அங்கு இடம் கிடைக்காதவர்கள் தன் பிரசங்கத்தை கேட்க வரட்டும் என்றும் ஜெபித்தார். மேயர் எலும்புருக்கி ஆகாதபடி பொறாமை குணத்தை மேற்கொண்டார் என்றே சொல்ல வேண்டும் (நீதிமொழிகள் 14:30). பெரும்பாலான மனிதர்களுக்கு பொறாமை என்பது இயற்கையானது.  சில கலாச்சாரங்கள் துரதிர்ஷ்டவசமாக  பொறாமைக்கு பீடம் அமைத்து கொடுக்கின்றன. மேலும் சாத்தானின் இந்த கொடிய வலையிலிருந்து பலரால் வெளியே வர முடியவில்லை.  விசுவாசிகள் கூட இந்த பாவத்திற்கு பலியாகின்றனர்.

தனித்துவம்:
தேவன் ஒவ்வொரு மனிதனையும் ஒரு சிறப்பான மற்றும் தனித்துவமான நபராக படைத்துள்ளார். தேவனுடனான உறவு மனிதர்களுடனான மற்ற எல்லா உறவுகளுக்கும் முந்தியுள்ளது.  எனவே, தேவனுக்கு நன்றியுடன் இருப்பதும், உலகில் உள்ள தனித்துவமான பங்கை அறிந்துகொள்வதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

தேவன் மாத்திரமே:
தேவன் நீதியுள்ளவர் என்று வேதாகமம் நமக்குக் கற்பிக்கிறது. தேவன் தனது சித்தத்திற்கு ஏற்ப ஆற்றலையும், வாய்ப்புகளையும் மற்றும் திறன்களையும் அளிக்கிறார் என்பதாக தாலந்துகளின் உவமை கற்பிக்கிறது (மத்தேயு 25:14-30). அவர் ஒவ்வொருவரின் திறமையையும் அறிந்து அதற்கேற்ப வழங்குகிறார். அளிக்கப்படும் பணியில் உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக நிச்சயம் இருக்க வேண்டும்.

 தேவையற்ற ஒப்பீடு:
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிய முயற்சிப்பது மனிதனுக்கே உள்ள ஆர்வம். அப்படி தகவல்களை அறியும் போது பொறாமையும் ஏற்படுகிறது. ஆம், பேதுருவும் உயிர்த்தெழுந்த இரட்சகருடனான  உரையாடலில் அன்பின் சீஷனான யோவானின் எதிர்காலத் திட்டத்தை அறிய விரும்பினான் (யோவான் 21:21). கர்த்தர் பேதுருவை ‘மற்றவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைக்காமல், உன்னுடைய காரியத்தில் கவனம் செலுத்தி, தன்னைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்து’ என்று
வெளிப்படையாகக் கடிந்துகொண்டார் (யோவான் 21:22).

அளவிடு:
பலரால் தரத்தில் அவர்கள் அளவை அடைய முடியாது.  ஆபேலின் ஆவிக்குரியத் தரத்தை காயீனால் அடைய முடியவில்லை.  எனவே, அவன் அவனை தனது நிலைக்கு இழுக்க விரும்பினான் அல்லது அவனை ஒரேடியாக ஒழித்துக்கட்ட விரும்பினான். இறுதியில் காயீன் தன் சகோதரனைக் கொன்றான் (ஆதியாகமம் 4).

பொறாமைக்கான மாற்று மருந்து ஆசீர்வதிக்கும் ஜெபம் மாத்திரமே.

 பொறாமை என்னும் ஆதிக்க குணத்திலிருந்து நான் தப்பித்துவிட்டேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download