இலவசம் என்ற உணவுப் பொறி

ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம் என்ற உணவகத்தின் விளம்பரத்தால் மூத்த வங்கி நிர்வாகி ஒருவர் ஈர்க்கப்பட்டார்.  உணவக பயன்பாடை தனது மொபைலில் பதிவிறக்கி உணவு ஆர்டர் செய்தார்.  சில நிமிடங்களில் அவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து இந்திய ரூபாய் தொண்ணூறு ஆயிரம் இழந்தார் (டெக்கான் ஹெரால்ட் 27 மே 2023).

ஐயாயிரம் பேருக்கு உணவு:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய போதனைகளைக் கேட்க வந்த ஐயாயிரம் பேருக்கும் மற்றவர்களுக்கும் உணவளித்தார் (மத்தேயு 14:13-21). துரதிர்ஷ்டவசமாக, கூட்டத்தில் இருந்த ஒரு குழு உணவை மட்டுமே நினைவில் வைத்திருந்தது, அவருடைய போதனையைப் பற்றி சிந்திக்கவில்லை.  அவர்கள் மீண்டும் ஒருமுறை இலவச உணவை விரும்பி, ஆண்டவரையும் அவருடைய சீஷர்களையும் தேடி அவரிடம் வந்தனர்.

மேய்ப்பன் இல்லாத ஆடு:
ஆண்டவர் அவர்கள் மீது இரக்கம் காட்டினார்.  அவர் அவர்களை நேசித்தார், அவர்களுக்கு சரியான வழிநடத்துதல், முன்னுரிமைகள் இல்லை என்று வருத்தப்பட்டார்.  அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் ஆத்துமாவின் நலனை விட உடலுக்கான உணவு மிகவும் முக்கியமாக இருந்தது.  அவர்கள் வாழ்க்கையின் திசை, நோக்கம் மற்றும் அர்த்தத்தை உணரவில்லை.

அழியும் உணவு:
அவர்கள் ஒரு நித்திய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று கர்த்தராகிய ஆண்டவர் விரும்பினார். "அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்" (யோவான் 6:27). மக்கள் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் உணவுக்காக செலவழிக்கக்கூடாது, ஆடம்பரமான உணவை அனுபவிப்பதற்காக பணக்காரர்களாக மாறக்கூடாது, உணவு என்பது அநுதினம் வாழ்வதற்காக மட்டுமே, அதற்கு அடிமையாக கூடாது. 

ஆதாம் ஏவாள்:
முதல் ஜோடி பசியோ பட்டினியோ இல்லை.  ஏதேன் தோட்டம் முழுவதும் அவர்களுக்கு ஏராளமான தெரிவுகள் இருந்தன.  ஆனால், ஆர்வத்தினாலும், ‘கடவுள்களைப் போல’ ஆகிவிடுவோம் என்ற பொய்யான வாக்குறுதியை நம்பினதாலும் எல்லாவற்றையும் இழந்தார்கள் (ஆதியாகமம் 3).

ஏசா:
ஏசாவுக்கு முதல் பிறப்பிற்கான உரிமைகளை விட ஒரு நேர உணவு மதிப்புமிக்கதானது (ஆதியாகமம் 25:29-34). அவர் குடும்பத்தில் தலைமைப் பாத்திரத்தையும் மற்றும் ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் சந்ததியாக உடன்படிக்கை ஆசீர்வாதத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்பதையும் ஒருவேளை சாப்பாட்டிற்காக மறந்தார் அல்லது நிராகரித்தார் என்றே சொல்லலாம்.

மனநிறைவு/திருப்தி இல்லை:
நிறைய சம்பாதிக்கும் மற்றும் அதிக வங்கி இருப்பு வைத்திருக்கும் ஒரு வங்கி அதிகாரி இலவச உணவைப் பெற விரும்புகிறார்.  ஒரு மூத்த வங்கி மேலாளராக, ஏழை மற்றும் பசியுள்ளவர்களுக்கு உணவளிக்க முடியும், ஆனால் தனக்காக இலவச உணவைத் தேடிக்கொண்டிருந்தார்.  சுயநலம் நிஜத்தின் கண்களை குருடாக்குகிறது மற்றும் ஏழைகளின் அழுகைக்கு காதுகளை மறைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 நான் ஒரு திருப்தியான வாழ்க்கையை நடத்துகிறேனா மற்றும் மற்றவர்களுக்கு உதவ முயலுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download