மரியாளின் துதி பாடல்: உன்னதர்

மரியாளின் துதி பாடல்: உன்னதர்
 
கிறிஸ்தவ சமூகம் என்பது பாடல்களின் மார்க்கம் எனலாம். உண்மையில், வேதாகமத்தின்  மிகப்பெரிய பாடல் புத்தகம் சங்கீதம். இது பலருக்கு விருப்பமானது என்பதில் ஆச்சரியமில்லை. வேதாகமத்தில் சில 'பிரபலமாக வெற்றி பெற்ற' பாடல்கள் உள்ளன. பிரபலமாக வெற்றி பெற்ற பாடல்களில் முக்கியமானது மரியாளின் பாடல். பிரபலமாக வெற்றி பெற்ற மற்ற பாடல்களும் உள்ளன; மோசேயின் பாடல், மிரியாமின் பாடல்  (யாத்திராகமம் 15), தாவீது மற்றும் ஆசாப்பின் பாடல் (1 நாளாகமம் 16), அன்னாளின் பாடல் (1 சாமுவேல் 2). 
 
"அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது, என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்" (லூக்கா 1:46-55). 
 
பின்னணியம்
கன்னி மரியாளுக்கு தேவதூதன் காட்சியளிக்கிறான்.  ஆண்டவருக்கு தாயாக இருக்கும் ஒரு பெரிய, உன்னதமான பணிக்காக மரியாள் அழைக்கப்பட்டதைக் குறித்து தெரிவித்தான். இது ஒரு எதிர்பாராத அழைப்பு, கனம் மற்றும் சிலாக்கியம். தேவதூதன் வாக்குறுதியளித்தபடி, அவள் கர்ப்பமானாள், அவளுக்கு ஐக்கியம், ஆவிக்குரியத் தோழமை, உறுதிப்பாடு மற்றும் ஊக்கம் அளிப்பவர் தேவை. வயதான மற்றும் ஆவிக்குரிய பக்குவமுள்ள எலிசபெத்துடன் இருக்க மரியாள் தேர்வு செய்தாள். இது வயதான மலடியான எலிசபெத்துக்கும், இளம் கன்னியான மரியாளுக்கும் இடையே ஒரு அற்புதமான நட்பு இருந்தது. கர்த்தரின் அற்புதமான மீட்பு திட்டத்தை நிறைவேற்ற இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 
எலிசபெத்துடன் சுமார் மூன்று மாதங்கள் தங்கி இருக்க மரியாள் 100 கிமீ பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவள் எலிசபெத் மற்றும் சகரியாவின் வீட்டிற்குள் நுழைந்தபோது, வாழ்த்து ஒரு பெரிய உறுதிமொழியாக இருந்தது. எலிசபெத் மரியாளிடம், தன்னைப் பார்க்க வந்தது பாக்கியம் என்று கூறினாள். அதே சமயம் அத்தாயின் கருவில் இருந்த யோவான் ஸ்நானகன் என்ற குழந்தை துள்ளிக் குதித்தது. பிறக்காத குழந்தை ஆவிக்குரிய உணர்வுடன் இருந்தது.
 
மரியாளின் இனிமையான பாடல் 
மரியாளின் பாடல் அன்னாளின் ஜெபத்திற்க்கு இணையாக உள்ளது. அன்னாளின் முதல் பிள்ளை, சாமுவேல் அவர் ஆசாரியர், தீர்க்கத்தரிசி, நியாயாதிபதி மற்றும் இஸ்ரவேல் ஜனங்களின் முதல் இரண்டு ராஜாக்களை அபிஷேகம் செய்தவர். இங்கு, கர்த்தராகிய இயேசு தீர்க்கதரிசி, ஆசாரியர், ராஜா மற்றும் நியாயாதிபதி, எனவே அபிஷேகம் செய்யப்பட்டவர் என்பது சுவாரஸ்யமானது.
 
1. ஆராதனை என்பது கர்த்தரை மகிமைப்படுத்துவது 
மகிமைப்படுத்துவது என்பதன் ஆங்கில பதம் (magnifying) ஒரு பொருளின் உருவத்தைப் பெருக்கம் செய்வதைக் குறிக்கும். ஒரு நுண்ணோக்கி சிறிய விஷயங்களை மிகத் தெளிவாகப் பார்க்க பெரிதாக்குகிறது. நம் வாழ்வில், எதையாவது பெரிதாக்க முனைகிறோம். ஒரு விளையாட்டு வீரர் விளையாட்டைப் பெரிதாக்குகிறார்; ஒரு மருத்துவர் தனது மருத்துவத் தொழிலைப் பெரிதாக்குகிறார், ஒரு ஆசிரியர் தனது கல்விச் சேவையைப் பெரிதாக்குகிறார்; ஒரு அரசியல்வாதி அரசியல் அல்லது ஆட்சியைப் பெரிதாக்குகிறார். இருப்பினும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துகிறார்கள். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் சிறந்த தேவனை, பரிசுத்த தேவனை, வல்லமையுள்ள தேவனை, அன்பான தேவனை நம்மில் பெரிதாகக் காண வேண்டும்.
 
2.  ஆராதனை என்பது முழுமையையும் உள்ளடக்கியது 
ஆராதனை முழுமையையும் உள்ளடக்கியது. மரியாள் தனது ஆத்துமா அல்லது உள்ளான ஆழத்திலிருந்து தேவனை துதிப்பதாக கூறினாள். அவள் ஆவியில் பாடினாள். பாடலின் உள்ளடக்கம் ஒரு சிறந்த அறிவுசார் உள்ளடக்கத்தை வழங்குகிறது, மரியாள் மகிழ்ச்சியுடன் பாடினாள், அதாவது உணர்ச்சிகரமான ஈடுபாடு.
 
3. ஆராதனை என்பது பரிசுத்த தேவனை துதித்தல் 
கர்த்தரின் பண்புகளை புரிந்து கொண்டாள் மரியாள். பாடல்கள் நமக்கு இறையியலைக் கற்பிக்கின்றன. எனவே பாடலாசிரியர்கள் கர்த்தருடைய வார்த்தையால் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். கர்த்தரின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று: சர்வவல்லமையுள்ள தேவன் பரிசுத்தமானவர். மற்ற மதங்களைப் போலல்லாமல், கர்த்தர் பரிசுத்தமாக வெளிப்படுத்தப்படுகிறார். எருசலேம் தேவாலயத்தின் உட்பகுதி மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ள நாம் அழைக்கப்பட்டுள்ளோம் (சங்கீதம் 96:9). ஆசாரியர்கள் கர்த்தருக்கு பரிசுத்தம் என அறிவிக்கும் பலகையை வைத்திருக்க வேண்டும். உண்மையில், மரியாள் கர்த்தரால் பயன்படுத்தப்படும் ஒரு பரிசுத்த பாத்திரமாக மாறினார்.
 
4. ஆராதனை என்பது அவரின் இரக்கத்தை நினைப்பது 
கர்த்தரின் மற்றொரு சிறந்த பண்பு இரக்கம் (கருணை).  தகுதியற்ற, தீமைக்குத் தகுதியான மற்றும் நரகத்திற்கு தகுதியான மனிதகுலத்திற்கு தேவன் இரக்கம் காட்டுகிறார்; கர்த்தரின் இரக்கத்திற்க்கு மரியாள் சாட்சியாக இருந்தாள். அவள் தேர்ந்தெடுக்கப்பட்டாள், ஆனால் ஒரு ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவள், ஆண்டவரின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். சென்னையில் வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட்டது. பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. சிலர் உணவுப் பொட்டலங்களை அல்லது படுக்கை விரிப்புகள் அல்லது ஆடைகளை மக்கள் மீது வீசினர். அதே சமயம், கிறிஸ்தவ அரசு சாரா அமைப்பினர் ஒவ்வொருவருக்கும் புன்னகையுடன் பொட்டலங்களை வழங்கினர். கர்த்தரின் இரக்கம் என்பது கண்ணியத்துடன் கூடிய கருணையாகும். 
 
5. ஆராதனை என்பது அவரது கிரியைகளை எண்ணுதல்
உலகில் கர்த்தரின் செயல்களும் அவரின் பிள்ளைகளிடம் செயல்படும் விதமும் ஆச்சரியமாக இருக்கிறது. கர்த்தர் சர்வவல்லமையுள்ளவர் மற்றும் அற்புதமான வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகிறார். இருப்பினும், தேவன் வல்லமையுள்ள காரியங்களையும் பெரிய காரியங்களையும் செய்கிறார் என்று மரியாள் விவரிக்கிறார் (இது அதிகாரத்திற்காக அல்ல, நோக்கத்திற்காக). 
 
வல்லமை என்பது கட்டுப்பாடற்ற வலிமையைக் குறிக்காது, ஆனால் நோக்கமுள்ள வல்லமை. பாவிகளைக் கொல்வதும் அழிப்பதும் எளிது. அது வெறும் வலிமையாக இருப்பது; கர்த்தர் பாவிகளை மீட்டு மாற்றும் போது, அது சர்வ வல்லமையாகிறது; அது பெரும். உலகில் இதற்கு சமமான அல்லது இணையான சக்தி இல்லை.
மரியாள் மூன்று வகையான மனிதர்களைப் பற்றி பாடுகிறார், மேலும் அவர்களை மாற்றுவதற்கு கர்த்தர் தனது பெரிய வல்லமையை எவ்வாறு காட்டுகிறார். ஆதரவற்றவர்கள் (51), தாழ்மையுள்ளவர்கள் (52), பசியுள்ளவர்கள் (53) உதவி செய்யப்பட்டு அவர்கள் மாற்றப்படுகிறார்கள். பெருமிதம் கொண்டவர்கள் சாமானியர்களை பாதிக்கப்படக்கூடியவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும், சக்தியற்றவர்களாகவும் ஆக்குகிறார்கள். எண்ணங்களில் பெருமிதம் கொண்டவர்கள் அல்லது ஆணவமும் அகந்தையுள்ளவர்கள் சிதறடிக்கப்படுகின்றனர். இங்கு மதிப்பு மாற்றம் உள்ளது.
தாழ்மையானவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் உயர்ந்தப்படிகிறார்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் வலிமைமிக்கவர்கள் - சக்தியின் சின்னம் மற்றும் வளங்களைக் கட்டுப்படுத்துபவர்கள் சக்தியற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் அவமானப்படுத்தப்பட்டவர்கள் கர்த்தரால் உயர்த்தப்படுகிறார்கள். இங்கு சமூக மாற்றம் உள்ளது. பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது. வளங்கள் இல்லாத அல்லது வளங்களை அணுக முடியாத மக்களுக்கு வழங்கப்படுகிறது அல்லது உணவளிக்கப்படுகிறது. பெருமைக்காரர், பணக்காரர் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் வெறுமையாக அனுப்பப்படுகிறார்கள். இங்கு பொருளாதார மாற்றம் உள்ளது.
 
6. கர்த்தரின் வாக்குத்தத்தங்களுக்காக அவரை ஆராதியுங்கள்
மரியாளின் அழகான பாடலில், அவர் கர்த்தரின் வாக்குத்தத்தங்களை மேலும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் உண்மையுள்ள, கிருபையுள்ள கர்த்தரை நமக்கு நினைவூட்டுகிறார். யூத மக்கள் பல நூற்றாண்டுகளாக உண்மையற்றவர்களாக இருந்தபோதிலும், கர்த்தர் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் கொடுத்த வாக்குத்தத்தங்களை என்றென்றும் நிறைவேற்றுகிறார். கர்த்தர்  நித்தியமானவர் அது போல கர்த்தரின் வாக்குத்தத்தங்களும்  நித்தியமானவை. அவை உண்மையானவை மற்றும் அந்த அற்புதமான வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் வல்லமை கர்த்தருக்கு உள்ளது.
ஆபிரகாமின் ஆசீர்வாதத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஆபிரகாமின் சந்ததிகள் பூமியின் தூளைப் போலவும், வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலவும் எண்ணிலடங்காமல் இருப்பார்கள் என்று கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்தார். தூள் என்ற முதல் அம்சம் இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. இரண்டாவது அம்சம் நட்சத்திரம் சபையைக் குறிக்கிறது. இந்த மாபெரும் வாக்குறுதியை மரியாள் புரிந்துகொண்டார்.
 
முடிவுரை
ஒரு வேத அறிஞர் எழுதினார்: “பரலோகம் மனத்தாழ்மையானவர்கள் மகிமைப்படுத்துதல், நரகம் பெருமையானவர்கள் தாழ்த்தப்படுதல்.” பாடல் உள்ளடக்கம் நிறைந்தது. கர்த்தரைப் பற்றிய பெரிய உண்மைகளையும் உண்மையான ஆராதனையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதையும் இது கற்பிக்கிறது. கிறிஸ்துமஸ் என்பது விருந்து மட்டுமல்ல, அற்புதமான ஆராதனையின் அழைப்பு.

தேவனை துதித்து ஆராதித்து மகிழ்கிறோமா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Rev. Dr. J .N. மனோகரன் Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download