லூக்கா 1:46-55

1:46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது.
1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.
1:49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது.
1:50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.
1:51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
1:52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்.
1:53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார்.
1:54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து,
1:55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள்.




Related Topics



மரியாளின் துதி பாடல்: உன்னதர்-Rev. Dr. J .N. மனோகரன்

மரியாளின் துதி பாடல்: உன்னதர்   கிறிஸ்தவ சமூகம் என்பது பாடல்களின் மார்க்கம் எனலாம். உண்மையில், வேதாகமத்தின்  மிகப்பெரிய பாடல் புத்தகம்...
Read More



அப்பொழுது , மரியாள்: , என் , ஆத்துமா , கர்த்தரை , மகிமைப்படுத்துகிறது , , லூக்கா 1:46 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 1 TAMIL BIBLE , லூக்கா 1 IN TAMIL , லூக்கா 1 46 IN TAMIL , லூக்கா 1 46 IN TAMIL BIBLE , லூக்கா 1 IN ENGLISH , TAMIL BIBLE Luke 1 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 1 TAMIL BIBLE , Luke 1 IN TAMIL , Luke 1 46 IN TAMIL , Luke 1 46 IN TAMIL BIBLE . Luke 1 IN ENGLISH ,