கர்த்தரால் பூமியைச் சுதந்தரிப்பவர்கள்

1. காத்திருக்கிறவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 37:9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக் கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
சங்கீதம் 37:34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்

2. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 37:11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்
மத்தேயு 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்

3. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 37:22 ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள் வார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள் 
ஆதியாகமம் 22:17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும் உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்

4. நீதிமான்கள் பூமியைச் சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 37:29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.
நீதிமொழிகள் 3:33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக் கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
ஏசாயா 60:21 உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரித்தரிக்குங்குடிகளும் நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள்

5.       கர்த்தருக்குப்  பயப்படுகிறவர்கள்    பூமியைச்    சுதந்தரிப்பார்கள்
சங்கீதம் 25:12-13 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துக்கொள்ளும் வழியைப் போதிப்பார். அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளும்

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download