கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்

ரோமர் 12:11 (1-11) அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக் காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
எபிரெயர் 5:4; ரோமர் 14:18; மத்தேயு 6:24; மத்தேயு 20:28

1. தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்
எபேசியர் 6:6 (6-8) மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர் களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின்  ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். 
மத்தேயு 25:14-30 (தாலந்து) அப்போஸ்தலர் 20:24 (பவுல்)
  
2. கபடமில்லாத இருதயத்தோடே செய்யுங்கள்
கொலோசெயர் 3:22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்படிந்து, நீங்கள் மனுஷனுக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் தேவனுக்கு பயப்படுகிற வர்களாகக் கபடமில்லாத இருதயத் தோடே ஊழியஞ்செய்யுங்கள். 
2தீமோத்தேயு 2:15; 2:24; 4:5 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு

3. அன்பினாலே ஒருவருக்கொருவர் செய்யுங்கள்
கலாத்தியர் 5:13 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர் கள், இந்த சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அனுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.
எபிரெயர் 6:10 உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே


Author: Rev. M. Arul Doss  


கர்த்தரையே சேவியுங்கள்

யோசுவா 24:15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய் கண்டால், பின்னை யாரைச் சேவீப்பீர்கள்... நானும் என் வீட்டாருமோ வென்றால், கர்த்தரையே சேவிப்போம் 
யாத்திராகமம் 23:25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கட வீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்.
2நாளாகமம் 34:33 (யோசியா) இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களை யெல்லாம் கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்
ரோமர் 1:9 (பவுல்)நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்
சங்கீதம் 2:11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள். 

1. முழுமையாய்ச் சேவியுங்கள்
1சாமுவேல் 12:20 சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத் தோடும் சேவியுங்கள்
உபாகமம் 10:12(12-20) இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து... உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து...
உபாகமம் 11:13(11-16) உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவி

2. உண்மையாய்ச் சேவியுங்கள்
யோசுவா 24:14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்.
1சாமுவேல் 12:24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்.

3. உற்சாகமாய்ச் சேவியுங்கள்
1நாளாகமம் 28:9 (தாவீது-சாலொமோன்) உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களை எல்லாம் அறிகிறார்

Author: Rev. M. Arul Doss 

 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download