நான் அல்ல (பவுல்)

1. எனக்குள் இருக்கும் பாவத்தினால் மரிக்கிறேன்
ரோமர் 7:19-20(8-25) நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படி செய்கிறது
ரோமர் 7:9 முன்னே நியாயப்பிரமாணம் இல்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர் கொண்டது, நான் மரித்தவனானேன்.

2. எனக்குள் இருக்கும் கிருபையினால் வாழ்கிறேன்
1கொரிந்தியர் 15:1-10 நான் அப்போஸ்தலர் எல்லாரிலும் சிறியவ னாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவ கிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படி செய்தது.

3. எனக்குள் இருக்கும் கிறிஸ்துவினால் பிழைக்கிறேன்
கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையில் அறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்தி ருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத் திருக்கிறேன்.
ரோமர் 8:10 கிறிஸ்து உங்களில் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
ரோமர் 6:11 நீங்கள் உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்மு டைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக் கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download