ஞானத்தைத் தரும் கர்த்தர்

நீதிமொழிகள் 2:6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்
பிரசங்கி 1:17 அவர் நல்லவனுக்குத் தருகிறார்
நீதிமொழிகள் 2:7 நீதிமானுக்குத் தருகிறார்
சங்கீதம் 111:10; நீதிமொழிகள் 1:7; 9:10; 15:33 கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம் 
யாக்கோபு 1:5 ஒருவன் ஞானத்திலே குறைவுள்ளவனாயிருந்தால், சம்பூரணமாய் கொடுக்கிற தேவனிடத்தில் கேட்கக்கடவன் 
தானியேல் 2:21 ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்

1. யோசேப்புக்குத் தந்தார்
ஆதியாகமம் 41:39 (38-46) பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவை எல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப் போல விவேகமும் ஞானமுள்ளவன் வேறொருவனும் இல்லை.
அப்போஸ்தலர் 7:10 பார்வோன் சமுகத்திலே யோசேப்புக்குக் கிருபை யையும் ஞானத்தையும் அருளினார்.

2. பெசலெயேலுக்குத் தந்தார்
யாத்திராகமம் 31:5 (1-5) சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிற தற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பி...
யாத்திராகமம் 35:30-33 ஞானத்தையும் புத்தியையும் அருளி, அவன் சகல வித வேலைகளை செய்யும்படி தேவ ஆவியினால் அவனை நிரப்பினார்.

3. சாலொமோனுக்குத் தந்தார்
1இராஜாக்கள் 4:29,30 தேவன் மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
1இராஜாக்கள் 5:12 கர்த்தர் சொல்லியிருந்தபடியே சாலொமோனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்
1இராஜாக்கள் 3:12(5-15) ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் ஒருவனும் இல்லை. 
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download