பொழிந்தருளின கர்த்தர்

1. ஆவியைப் பொழிந்தருளினார்
அப்போஸ்தலர் 2:17-18; யோவேல் 2:28-29 கடைசி நாட்களில் நான் மாம்ச மான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்... என்னுடைய ஊழியக்காரர்மேலும், ஊழியக்காரிகள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்
அப்போஸ்தலர் 2:33 பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்
அப்போஸ்தலர் 8:16-17 அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும் படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார் கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள் 
தீத்து 3:7(1-8) அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்த பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.

2. வரங்களைப் பொழிந்தருளினார்
அப்போஸ்தலர் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப் பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர் 2:38 பேதுரு:மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப் புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்
அப்போஸ்தலர் 10:44-46 பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து பிரமித்தார்கள்.

3. வசனத்தைப் பொழிந்தருளினார்
அப்போஸ்தலர் 2:41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். 3000 பேர் சோத்துக் கொள்ளப்பட்டார்கள்.
அப்போஸ்தலர் 4:4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார் கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. (5000) 
அப்போஸ்தலர் 6:7 தேவ வசனம் விருத்தியடைந்து; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. 

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download