மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்

எரேமியா 32:27  இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

1. மாம்சமான யாவரும் அவரிடத்தில் வருவார்கள்
சங்கீதம் 65:1-2  தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக் கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
1இராஜாக்கள் 8:30  உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தை...

2. மாம்சமான யாவரும் அவரை அறிவார்கள்
ஏசாயா 49:26 கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்ச கரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிவார்கள் 
ஆதியாகமம் 9:17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார்.

3. மாம்சமான யாவரும் அவரைத் தொழுவார்கள்
ஏசாயா 66:23 மாதந்தோறும் ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 
சகரியா 13:9 அவர்கள் என் நாமத்தைக் தொழுதுகொள்வார்கள்...

4. மாம்சமான யாவரும் அவரைக் காண்பார்கள்
ஏசாயா 40:3-5  லூக்கா 3:5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்ச மான யாவும் அதை ஏகமாய் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது. 
யோவேல் 2:28 நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கத் தரிசனஞ்சொல்லு வார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனம் காண்பார்கள் அப்போஸ்தலர் 2:17

5. மாம்சமான யாவரும் அவரைத் துதிப்பார்கள்
சங்கீதம் 145:21  என் வாய் கர்த்தரின் துதியை சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கடவது
சங்கீதம் 136:25 மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங்கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது சங்கீதம் 79:13;  ஏசாயா 43:21

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download