தேவனுக்குப் பயந்திருங்கள்

சங்கீதம் 112:1 அல்லேலுயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் 
சங்கீதம் 128:1 கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான்.
சங்கீதம் 25:14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.
சங்கீதம் 103:13 கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்
சங்கீதம் 111:5 தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்
சங்கீதம் 145:19 தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்...

1. தேவனுக்குப் பயந்த யோபு
யோபு 1:1,8; 2:3   ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.

2. தேவனுக்குப் பயந்த கொர்நேலியு
அப்போஸ்தலர் 10:2 (1-8)   அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டார னைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் ஜெபம்பண்ணிக்கொண்டிந்தான். 

3. தேவனுக்குப் பயந்த அனனியா
நெகேமியா 7:2   நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப் பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.

4. தேவனுக்குப் பயந்த மருத்துவச்சிகள் (சிப்பிராள், பூவாள்)
யாத்திராகமம் 1:20,21 (15-22) தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மை செய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். மருத்து வச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download