மகிழ்ச்சி குறைவு ஏன்??

வணிக மேலாண்மையில் முதுகலைப் படிப்பதற்காக தனது நாட்டிற்குள்ளாகவே ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் இளைஞன் ஒருவன் நண்பர்களுக்கு விருந்து வைக்க வெளியே சென்றான்.  ஆனால் அவன் மிகவும் கோபமாகவும், ஏமாற்றமாகவும், மகிழ்ச்சி குறைவுடனும் திரும்பி வந்தான். அதைக் கண்ட அவனுடைய பெற்றோர் ஆச்சரியப்பட்டனர்; பின்பு கவலையுடன் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள்.  அவனோ அவர்களிடம் வெறுப்பாக கத்தினான்; அதாவது அவனுடைய நண்பர்களில் ஒருவன் எம்பிஏ படிக்க அமெரிக்கா செல்வதாகவும், அவன் எல்லா விதத்திலும் தன்னை விட குறைவானவன் என்றும்; அதனால் தன்னால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்பதாக கூறி எரிச்சலடைந்தான். அவனின் பெற்றோரோ உனக்கு தான் நல்ல ஒரு மதிப்புமிக்க கல்வி நிறுவனத்தில் இடம் கிடைத்துள்ளதே; மேலும் பலர் இங்கு இடம் கிடைக்காதா என ஏங்குகின்ற இடத்தில் உனக்கு கிடைத்ததைக் குறித்து மகிழ்ச்சி கொள் என்று நியாயப்படுத்தினர், ஆனாலும் அவன் சோகமாகவே இருந்தான்.

 மனநிறைவு:
"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்" (1 தீமோத்தேயு 6:6). ஆம், போதும் என்கிற மனதில்லாமல் இருந்தாலும் அல்லது தேவபக்தியற்று காணப்பட்டாலும் அது  மிகப்பெரிய இழப்பு.   அதிருப்தி ஒரு நபரின் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொன்றுவிடுகிறது.  மனநிறைவு தெய்வீகத்தன்மையுடன் தொடர்புடையது; நன்மை, இரக்கம், தயவு, அன்பு, அக்கறை மற்றும் ஆதரவு போன்ற பண்புகளுக்காக தேவனை நம்புவதாகும்.  தேவன் தனது இறையாண்மை மற்றும் அதிகாரத்தின்படி ஒரு தாலந்தை அல்லது இரண்டு தாலந்தை அல்லது ஐந்து தாலந்துகளைக் கொடுக்கிறார்.  இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது மனநிறைவுக்கு வழிவகுக்கும்.

 நன்றியுணர்வு:
திருப்தியோடு இருப்பதன் மற்றொரு கூறு நன்றியுணர்வு.  அதிருப்தி என்பது ஒரு நபரிடம் இல்லாத அல்லது வைத்திருக்காதவற்றில் வெறித்தனமாக இருப்பதாகும்.  நன்றியுணர்வு என்பது தேவன் நமக்கு வழங்கியதையும் வரமாக அளித்ததையும் மையமாகக் கொண்டுள்ளது.  நன்றியுடன் இருப்பது ஒரு ஆவிக்குரிய சவால்.  நன்மை பயக்கும் விஷயங்களை மறப்பது மனித இயல்பிலேயே ஆதிக்கம் செலுத்துவதால், மனிதர்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பது பொதுவானதல்ல.

 என்னை விட சிறந்தவரா?
மற்றவர்களிடம் நன்மையையோ மகத்துவத்தையோ நேர்மையையோ காண முடியாதவர்களாக இருக்கிறார்கள்; தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் சுயநலவாதிகள்.  துரதிர்ஷ்டவசமாக, தாங்கள் தான் உலகின் மையம் என்றும்;  இந்த பிரபஞ்சமே தங்களைச் சுற்றி தான் சுழலுவது போல் நினைக்கிறார்கள்.

 பொறாமை:
 ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமைக்குப் பிறகு, பொறாமை என்பது கொடுமை மற்றும் கொலைக்கு வழிவகுத்தது; அது பேரழிவு தரும் பாவமாக மாறியது (ஆதியாகமம் 4).   காயீன் தன் சகோதரனைக் கொன்றான், அவனுடைய சகோதரன் ஆபேல் நீதியுள்ளவன், அவனுடைய பலி தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆபேல் உயிருடன் இல்லாவிட்டால், தேவனுக்கு வேறு வழியே இல்லை; தன் காணிக்கையை ஏற்றுக்கொள்வது தான் ஒரே வழி மற்றும் ஆபேல் தொடர்ந்து பலி செலுத்தினால், அவர் தன்னுடையதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று காயீன் நினைத்திருக்க வேண்டும்.

 மற்றவர்களைப் பார்த்து என் மகிழ்ச்சி, அமைதி, மனநிறைவு ஆகியவற்றை இழக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download