நம் கையில் என்ன இருக்கிறது?

பல நேரங்களில், தேவ ஜனங்கள் தங்கள் கைகளில் இருக்கும் வளங்களின் மதிப்பை அறிய மாட்டார்கள்.  இருப்பினும், தேவன் தனது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும், அவருடைய மகிமைக்காகவும் அற்ப சொற்ப வளங்களைப் பயன்படுத்துகிறார், அதில் சந்தோஷமும் படுகிறார்.

ஒரு தாற்றுக்கோல்:
எட்டடி நீளமுள்ள குச்சி ஒரு தாற்றுக்கோல் ஒரு முனையில் மாட்டை குத்துவதற்கு கூர்மையாகவும், மறுமுனை கலப்பையை அழுக்குத் துடைக்காத உளி போலவும் இருந்தது.  வீரமிக்க சம்கார் ஒரு தாற்றுக்கோலால் தேவ ஜனங்களை துன்புறுத்திய 600 பெலிஸ்தரை தன்னந்தனியாக முறியடிக்கிறார் (நியாயாதிபதிகள் 3:21).

ஒரு கல்:
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, நன்கு பொருத்தப்பட்ட மற்றும் நன்கு அனுபவம் வாய்ந்த கோலியாத்துக்கு எதிராக போராட தாவீது ஒரு சில கற்களையும் ஒரு கவணையும் மட்டுமே எடுக்கத் தேர்ந்தெடுத்தார்.  சவுல் ராஜா அவனுக்கு ஒரு முழுமையான கவசத்தை வழங்கினான்.  தேவன் அவனுக்கு வெற்றியைக் கொடுக்க அந்தக் கல்லைப் பயன்படுத்தினார் (1 சாமுவேல் 17:49).

ஒரு தாடை எலும்பு:
சுவாரஸ்யமாக, யூதாவின் 3000 பேர் சிம்சோனைக் கட்டிப்போட்டு, 1000 பெலிஸ்தியர்களைக் கொன்று குவிப்பதற்கு முன்பு லேகியில் விட்டுச் சென்றனர்.  யூதா பெலிஸ்தியர்களை விட பெரிய படையைக் கொண்டிருந்தது, ஆனால் அவர்கள் பெலிஸ்தியர்களிடம் சரணடைந்தனர்.  யூதாவின் மக்கள் தங்களை விடுவிப்பவரை ஆதரிப்பதற்குப் பதிலாக ஒடுக்குபவரைப் பிரியப்படுத்தத் தயாராக இருந்தனர்.  பெலிஸ்தியர்கள் சிம்சோன் மீது பாய்ந்தனர், ஆனால் தேவ ஆவி அவன்மீது வந்தது, கயிறுகள் அக்கினியின் தொடுதலால் கயிறுகள் உடைந்தன.  கழுதையின் புதிய தாடை எலும்பைக் கொண்டு 1000 பேரைக் கொன்றான் (நியாயாதிபதிகள் 15:9-17).

ஒரு கைத்தடி:
மோசேயின் கையில் என்ன இருக்கிறது என்று தேவன் கேட்டார்.  அவனது பதில் ஒரு கைத்தடி அல்லது ஒரு கோல் (யாத்திராகமம் 4:2). எகிப்திய வல்லரசை எதிர்கொள்ள மோசேயை தேவன் அனுப்பினார்.  காலாட்படை, குதிரைப்படை, இரதங்கள் போன்றவற்றில் எகிப்தின் வல்லமையை மோசே அறிந்திருந்தார்.  தேவனை நம்பி கைத்தடியுடன் சென்றார்.  மோசேயின் அந்தக் கோல் பின்னர் செங்கடலைப் பிரித்தது, தண்ணீரைக் கொண்டுவர ஒரு பாறையை அடித்தது, மேலும் அதை உயர்த்தும் போது வெற்றியைத் தந்தது.   இது பின்னர் தேவனின் கோல் என்று அழைக்கப்பட்டது (யாத்திராகமம் 4:20; 17:9).

ஒரு சிறுவனின் மதிய உணவு:
ஒரு பெரிய கூட்டத்தில், ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் கொண்ட ஒரு சிறுவன் மட்டுமே அதைக் கர்த்தருக்குக் கொடுக்க சித்தமாயிருந்தான் (யோவான் 6:9). ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என ஐயாயிரம் பேருக்கும் மேற்பட்டவருக்கு உணவளிக்க தேவன் அந்த சிறுவனின் சிறு பலியைப் பயன்படுத்தினார்.  பின்னர் பன்னிரண்டு கூடைகள் மீதம் இருந்தன.

தேவன் என் கையில் இருப்பதைப் பயன்படுத்துவார் என்று நான் நம்புகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download