சிலுவையின் பாதை

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்கள் அவரவர் சிலுவையைச் சுமந்துக் கொண்டு பின்பற்றி வருமாறு கூறினார். அப்படி  இறுதிவரை அவரை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் மகிமையான கிரீடத்தைப் பெறுவார்கள் (மத்தேயு 16:24-26). துரதிர்ஷ்டவசமாக, அநேக பிரசங்கிகள் செழிப்பான உபதேசத்தை வழங்குகிறார்கள், அது அவர்களை வெறுமைக்கு அழைத்துச் செல்லும்.

மரணத்தைத் தழுவுதல்:
மரணத்தைக் கண்டு அஞ்சாதவன், எல்லா சவால்களையும் கொண்ட வாழ்க்கையைப் பற்றி பயப்படுவதில்லை.  ரோமானிய ஆட்சியின் கீழ் சிலுவையை எடுக்கும் ஒருவர் அபாயமான, கொடூரமான மற்றும் சித்திரவதையான மரணத்தை எதிர்கொள்வார்.  அதாவது, காணக்கூடிய மற்றும் இந்த உலகம் தற்காலிகமானது மற்றும் அனைத்தும் இறந்து சிதைந்துவிடும் என்பதை புரிந்துகொள்வதாகும்.  இதில் வேடிக்கை என்னவென்றால் மரணத்தைத் தழுவுவதன் மூலம், விசுவாசிகள் நித்திய ஜீவனைத் தழுவுகிறார்கள் என்பதே.

தன்னடக்கமாக இருத்தல்:
சிலுவை என்பது தாழ்மையின் இடம்.  கர்த்தராகிய இயேசு தம்மையே வெறுமையாக்கி, தன்னைத் தாழ்த்தி, மரணத்தை ஏற்றுக்கொள்ள கீழ்ப்படிந்தார் (பிலிப்பியர் 2:7-11). தாழ்மையான விசுவாசிகள் தேவனின் கிருபையைப் பெற்றவர்கள்.

 மெதுவாக மற்றும் நிலையாக ஓடுதல்:
சிலுவையுடன் ஓடுவது என்பது சாத்தியமில்லை. ஓட  முயற்சி செய்பவன் தடுமாறி விழுவான்.  பொதுவாகவே கிறிஸ்தவ வாழ்க்கை மெதுவான மற்றும் நிலையான பயணம்.  உண்மையில், சிலுவையைச் சுமக்கும் விசுவாசிகளுக்கு அது கனமானது, மேலும் அது வேகத்தையும் விரைவான நடையையும் கட்டுப்படுத்துகிறது.

 ஒழுக்கம் கற்றல்:
 சிலுவையை எடுப்பது என்பது நுகத்தடியில் இருப்பது போல் ஒழுங்கில் இருப்பதாகும்.  சாந்தமும், தயவும், மனத்தாழ்மையும் உள்ள அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இது சரியான சூழலை வழங்குகிறது  (மத்தேயு 11:29). இது தினசரி மரித்து, தினசரி கற்றலாகும், அதனால் மனம் வேதத்தின் சத்தியத்தால் புதுப்பிக்கப்படுகிறது.

 பின்தொடர்ந்து கவனம் செலுத்துதல்:
 ஒரு சீஷன் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும். அந்நபருடைய கண்கள் நம்முடைய விசுவாசத்தை தொடங்குபவராகவும் முடிப்பவராகவும் இருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது இருக்க வேண்டும் (எபிரெயர் 12:2). அவரிடமிருந்து கண்ணை அகற்றுவது என்பது ஆபத்தானது மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது மற்றும் மரணம் கூட நிகழலாம்.  கர்த்தராகிய இயேசு தண்ணீரில் நடந்தபோது பேதுரு தனது கவனத்தை இழந்தான், தண்ணீரில் மூழ்கினான் (மத்தேயு 14:27-31).

 அலைந்து செல்லல்:
 சிலுவையைச் சுமந்தவனுக்கு தளர்வான நடை இல்லை.  இது ஒரு நோக்கமுள்ள பயணம் மற்றும் ஒரு பயனுள்ள முயற்சி.  எனவே, விலகிச் செல்வதோ அல்லது புதிய வழிகளைப் பயன்படுத்துவதோ சாத்தியமில்லை.  யாத்ரீகர்களாக, விசுவாசிகள் பரிசுத்தம் என்னும் குறுகிய பாதையிலும் மற்றும் நீதியான வழியிலும் செல்ல வேண்டும்.

  நான் எனக்கான சிலுவையை எடுத்துக்கொண்டு, கற்றுக்கொண்டு, தினமும் கர்த்தராகிய ஆண்டவரைப் பின்பற்றுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download