தேவனை மகிழ்விப்பவர்களா! மனிதர்களை மகிழ்விப்பவர்களா?

தீரு மற்றும் சீதோன் பட்டணம் பெரிய ஏரோதின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பாவால் ஆளப்பட்ட பகுதியிலிருந்து உணவு விநியோகத்திற்காக சார்ந்திருந்தன. தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள். தீரு மற்றும் சீதோனின் தூதுக்குழுவினர் தங்களுக்கு உணவு வழங்குவதன் மூலம் ஏரோதை தங்கள் நாட்டின் மீட்பர் என்று போற்றினர்.  ஏரோதின் குரல் கடவுளின் குரல் என்றும் சொன்னார்கள். ஏரோதுவும் தனக்கு கிடைத்த பெரும் கைதட்டலை ரசித்தான்.  கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான் என்பதாக லூக்கா தெரிவிக்கிறார். பண்டைய யூத ஆசிரியனாகிய ஜொசிபஸ், ஏரோது வெள்ளியால் செய்யப்பட்ட ஒரு ஆடையுடன் அரங்கத்திற்குள் வந்ததாகவும், அது சூரிய ஒளியில் பிரகாசித்தது என்றும்  திடீரென்று, அவன் தனது வயிற்றில் கடுமையான வலியை உணர்ந்ததாகவும், கடுமையாக துடித்தான் மற்றும் ஐந்து நாட்களுக்கு வலி தொடர்ந்தது, பின்பு அவன் இறந்தான்  என்பதாக எழுதுகிறார் (அப்போஸ்தலர் 12:22-23).

இஸ்ரவேலை வழிநடத்த சவுல் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டான்.  தேவ சித்தத்தைச் செய்வதிலிருந்து படிப்படியாக வழிதவறிக் கொண்டிருந்தான். அமலேக்கியர்களை அவர்களுடைய பாவத்திற்காக அவர்களையும் அவர்களின் கால்நடைகள் உட்பட அவர்களுடைய உடைமைகள் அனைத்தையும் அழிக்கும்படி தேவன் சவுலை நியமித்தார். இருப்பினும், சவுலும் இஸ்ரவேலரும் கர்த்தருக்கு பலியிடுவதற்காக சில விலங்குகளை கொல்லாமல் காப்பாற்றினர்கள்.  சாமுவேல் சவுலை எதிர்கொண்டு, தேவன் சவுல் ராஜாவாக தொடர்ந்து  பணி செய்வதை நிராகரித்துவிட்டார் என்ற கடினமான செய்தியை அவனுக்குக் கொடுத்தார். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். சாமுவேல் மறுத்தபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று (1 சாமுவேல் 15).  இப்போதும்கூட, சவுல் தேவனைப் பிரியப்படுத்துவதற்குப் பதிலாக மக்களைப் பிரியப்படுத்துவதிலும் தன் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதிலும் அதிக அக்கறை காட்டினான்.

ஆண்டவர் இஸ்ரவேல் தேசத்தைப் பிரியப்படுத்தி, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று சாத்தான் வஞ்சகமாக விரும்பினான். "அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி; நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே" என கடிந்து கொண்டார் (மத்தேயு 4:5-7).

எண்ணற்ற நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களை மகிழ்விப்பதற்காக பலர் படங்கள், தகவல்கள் மற்றும் நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள்; ஆனால் சமூக ஊடகங்களில் போராட்டங்கள், வலிகள் அல்லது இழப்புகள் அல்ல;  அதிக விருப்பங்களைப் பெறுவதற்காக மட்டுமே.

நான் தேவனையா அல்லது மற்றவர்களையா; யாரைப் பிரியப்படுத்துகிறேன்?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download