நற்செய்தி மிக மிக அவசியம்

எல்லா மனிதர்களுக்கும் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஆணை கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  அடிப்படையில் சுவிசேஷம் என்பது மனிதகுலத்திற்கு ஒரு நல்ல செய்தி.  தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் பாவ மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் பெறுவார்கள்.

1) நித்திய கிறிஸ்து:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நித்தியமாக முன்பே இருப்பவர் மற்றும் சுயமாக இருக்கும் தேவனுடைய குமாரன் (யோவான் 1:1). “ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது” (கொலோசெயர் 1:16). 

2) சரித்திரத்தில் கிறிஸ்து:
காபிரியேல் தூதன் கன்னிகையான மரியாள் முன்பு தோன்றி, பரிசுத்த ஆவியானவரால் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவாய், உன்னதமானவரின் பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்; அவர் மக்களை அவர்களின் பாவத்திலிருந்து இரட்சிப்பார் (லூக்கா 1:28-35; மத்தேயு 1:21) என்று அறிவித்தார்.அவர் பெத்லகேமில் பிறந்தார், நாசரேத்தில் வளர்ந்தார். பின்னர் கர்த்தராகிய இயேசு மனிதகுலத்தோடு தன்னை அடையாளப்படுத்தும் படியாய் ஞானஸ்நானம் எடுத்தார், மேலும் யோவான் ஸ்நானகன்; அவரை "இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி" (யோவான் 1:29) என்றான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரித்து, பாவ மன்னிப்புக்காகத் தம் இரத்தத்தைச் சிந்தி, அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

 3) சமகால கிறிஸ்து:
 உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்றும் என்றும் உயிருடன் இருக்கிறார்.  உயிர்த்தெழுதலுக்குப் பிறகு 40 நாட்களுக்கு அவர் சீஷர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட ஜனங்களுக்கும் தோன்றினார்.

4) பரமேறிய கிறிஸ்து:
"இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்" (அப்போஸ்தலர் 1:9-11). 

5) மீண்டும் வரும் கிறிஸ்து:
"இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" (வெளிப்படுத்துதல் 22:12). பின்னர் எல்லா பரிசுத்தவான்களும் நித்தியம் முழுவதும் அவருடன் வாழ்வார்கள்.

 நான் சுவிசேஷத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download