துன்பமும் நல்ல மனிதர்களும்

ஒரு தேவ பக்தியுள்ள நபர் ஒரு வாகன விபத்தில் சிக்கியபோது, ​​அவர் குழப்பமடைந்தார் மற்றும் தடுமாற்றமடைந்தார்.  இது ஏன் நடந்தது?  தன்னை தானே தற்பரிசோதனை செய்தார், நான் எந்த பாவமோ அல்லது தவறோ செய்யவில்லையே அல்லது தேவ சித்தத்திலிருந்து விலகவில்லையே.  அப்புறம் ஏன் இப்படி நடந்தது? அப்படியானால், இது தேவனால் அனுமதிக்கப்பட்டதா?  நல்லவர்களுக்கும் நீதிமான்களுக்கும்  கெட்டது நடக்குமா?  ஆம், இந்த அபூரண உலகில், நீதிமான்களுக்கும், தேவனுக்குக் கீழ்ப்படியாமல் ஓடிப்போவோருக்கும், வேண்டுமென்றே பாவம் செய்பவர்களுக்கும் துன்பம் வரலாம்.  இத்தகைய துன்பங்களுக்கு நோக்கமும் அர்த்தமும் உண்டு.

தண்டனை மற்றும் தீர்ப்பு:
ஆகானின் பாவம் இஸ்ரவேல் தேசத்திற்கு தோல்வியைத் தந்தது (யோசுவா 7:21). ஒரு மனிதனின் பாவம் இஸ்ரவேல் தேசத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தியது.  அழிவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதை கொள்ளையடித்ததற்காக தேவனின் தண்டனை அது (யோசுவா 6:17-19). எரிகோ நகரத்தில் அனைத்தும் நெருப்பால் எரிக்கப்பட வேண்டும், ஆனால் அவன் தேவனுக்குச் சொந்தமானதைத் திருடினான்.

எச்சரிக்கை மற்றும் திருத்தம்:
தேவன் யோனாவை நினிவே நகருக்குச் செல்லும்படி கட்டளையிட்டார், ஆனால் அவன் அங்கு செல்ல விரும்பவில்லை.  எனவே, அவன் தர்ஷீசுக்கு செல்லும் கப்பலில் ஏறி, கப்பலின் அடித்தளத்தில் சென்று தூங்கினான். தேவன் பெரும் காற்றையும் பெரும் புயலையும் அனுப்பினார்.  அனைவரும் தங்கள் சொந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டிருந்தபோது, ​​யோனா தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவன் விழித்தெழுந்தான், அவன் தேவ சமூகத்தில் இருந்து தப்பித்து ஓடுவதை ஒப்புக்கொண்டான். அவனது வேண்டுகோளின் பேரில், கடலில் வீசப்பட்டான். தேவன் தயார்படுத்தி வைத்திருந்த மீன் அவனை விழுங்கியது; பின்பதாக அவன் மனந்திரும்பி அதன் வயிற்றில் இருந்து ஜெபித்த பிறகு, தேவன் அவனை நினிவேக்கு அழைத்துச் சென்றார்.

சோதனை மற்றும் பக்குவம்:
யோபு தேவனால் நீதிமான் என்று சான்றளிக்கப்பட்டான்.  இருப்பினும், யோபுவின் கையின் கிரியைகளை தேவன் ஆசீர்வதித்ததினால் தான் யோபு தேவனை பின்பற்றுவதாக சாத்தான் தேவன் மீது குற்றம் சாட்டினான். யோபை சோதிக்க தேவன் சாத்தானுக்கு அனுமதித்தார் (யோபு 1:5-8). யோபுவின் மீது விழுந்த பேரழிவும் பெருந்துன்பமும் சாத்தானை ஒரு கொலைகாரனாக, கொள்ளைக்காரனாக, அழிப்பவனாக வெளிப்படுத்தியது (யோவான் 10:10). அவனுடைய இலக்கு யோபு என்றாலும், உடனிருந்த பலர் பாதிக்கப்பட்டனர்.  யோபுவின் மேய்ப்பர்கள், காவலர்கள், பண்ணை வேலையாட்கள் மற்றும் வீட்டு வேலையாட்கள் அனைவரும் தங்கள் உயிரை இழந்தனர், பலர் விதவைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும், வாழ்வாதாரத்தை இழந்தவர்களாகவும் ஆனார்கள்.  துன்பம் நெருப்பினால் சோதிக்கப்படும் பொன் போன்றது என்றும், இறுதியில் பொன்னாக விளங்குவேன் என்றும் யோபு நம்புகிறான் (யோபு 23:10).

தேவனின் கண்ணோட்டத்தில் துன்பத்தை நாம் கருதுகிறோமா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download