துறப்பு

ஒரு சிலர் பெரும் செல்வந்தர்களாகவும், தங்கள் செல்வங்களைத் துறந்து துறவிகளாகவும் இருக்கிறார்கள்.   இருபத்தி நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான இந்திய ரூபாய் மதிப்பில் 200 கோடி செல்வத்தை ஒரு ஜோடி துறந்தது (பிசினஸ் ஸ்டாண்டர்ட், ஏப்ரல் 16, 2024). இதற்கு முன்பும் பொருள்முதல்வாதத்தைத் துறந்து சில மதங்களின் ஆன்மீகத்தைத் தழுவிய பல சம்பவங்கள் உள்ளது. 

ஒரு பணக்கார இளைஞன்:  
கர்த்தராகிய இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​நித்திய ஜீவனைப் பெறுவதற்கான ஆலோசனையை நாடி ஒரு இளம், சிறந்த, பணக்கார, மற்றும் உயர் அந்தஸ்துள்ள மனிதன் அவரிடம் வந்தான்  (லூக்கா 18:18-30). கர்த்தர் அவனிடம், அவனுடைய செல்வத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுத்து, சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்று என்றார்.

துறப்புக்கான சோதனை:  
பணக்கார இளைஞன் துறவு சோதனையில் தோல்வியடைந்தான்.   சென்று, தன் செல்வத்தை விற்று, ஏழைகளுக்குக் கொடுக்க அவன் தயாராக இல்லை.   செல்வத்தில் பாதுகாப்பையும் காப்புறுதியையும் மனிதர்கள் தேடுவது இயல்பு.  பெரும்பாலான மக்கள் திருப்தியடைவதை விட அதிகமாக ஏங்குகிறார்கள்.  துரதிர்ஷ்டவசமாக, சிலர் தாங்கள் சம்பாதிக்கும் செல்வத்தால் ஏமாற்றமடைகிறார்கள்.   யூதாஸ் முப்பது வெள்ளிக் காசுகளை அடைந்தும் அனுபவிக்க முடியவில்லை, அதற்காக அவன் தனது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தான்.  ஆனால் அனுபவிக்கவில்லை, அதை ஆலயக் கருவூலத்தில் வீசிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் (மத்தேயு 27:5).  எனினும் இந்த பணக்கார தம்பதியினர் இவ்வளவு பெரிய செல்வத்தை துறக்கும் மனப்பாங்கிற்கு பாராட்டப்பட வேண்டும். 

சிலுவை சோதனை: 
செல்வத்தைத் துறப்பது ஒரு நல்ல விஷயம் தான், ஆனால் செல்வத்தைத் துறந்து எதற்கான வாழ்க்கையாக இருக்க போகிறது என்பது ஒரு பெரிய கேள்வி.  செல்வம் இல்லாத வாழ்க்கை கிறிஸ்துவின் திருவுளத்தின் கீழ் வர வேண்டும்.   இந்த ஜோடி இரண்டாவது சோதனையில் தோல்வியடைந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.   வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தைப் பெறுவதற்குப் பதிலாக, தம்பதியினர் பெரும் தவம் செய்து உண்மையைத் தேட முடிவு செய்தனர்.   கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் சத்தியம் வெளிப்படுத்தப்பட்டு உருவகப்படுத்தப்பட்டுள்ளது.   நமக்காக ஜீவனைக் கொடுப்பவரை அறிந்து, நம் வாழ்வையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்கத் தயாராக இருப்பது என்பது சிலுவையை எடுக்க வழிவகுக்கும் உண்மையான துறவு ஆகும். 

உயிர்த்தெழுதலின் வல்லமை:  
ஒரு ஆற்றல்மிக்க, இளம் மதத் தலைவராக இருந்த பவுல், அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறிய தனது செல்வம், அனுபவம், திறன்கள் மற்றும் அறிவு அனைத்தையும் குப்பை என அறிந்து அதைத் துறந்தார் (பிலிப்பியர் 3:11-15).

 நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுள்ளேனா மனந்திரும்பியுள்ளேனா, கர்த்தருக்காக அனைத்தையும் துறந்துள்ளேனா? 

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download