கோபத்தை கைவிடுங்களேன்

கணினி அமைப்புகளில், ரேண்டம் அக்சஸ் மெமரி மற்றும் ஹார்ட் டிஸ்க் (தகவல்களைச் சேமிக்க கணினியிலேயே திறமையான வட்டு) இரண்டும் வெவ்வேறு கூறுகளாகும். தஅங என்பது தரவுகளை சேமித்து வைக்க கூடிய அமைப்பு ஆனால் நிரந்தரமாக அல்ல, கணினி அல்லது மொபைல் ஆப் செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும். இருப்பினும், ஹார்ட் டிஸ்க் நீண்ட கால சேமிப்பிற்கானது மற்றும் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் அப்படியே இருக்கும். ரேம் கணினிக்கான செயல்பாட்டு வேகத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் ஹார்ட் டிஸ்க் அனைத்து கோப்புகளையும் சேமிக்கும் இடம்.

"நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்" (எபேசியர் 4:26,27) என்பதாக பவுல் எழுதுகிறார். கோபம் தஅஙல் இருக்கலாம் ஆனால் ஹார்ட் டிஸ்கில் இருக்கக்கூடாது. அது ஒரு ஹார்ட் டிஸ்கில் சேமிக்கப்படும் போது, பேரழிவு விளைவுகளை கொண்டு வர அந்த கோபத்தை கையாள பிசாசுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

கோபம் நம்மை ஆறுதல்படுத்த முடியாது, மாறாக அது நம்மைக் கட்டுப்படுத்தி நம்மை அழிக்கும். கோபம் மக்கள் மீது வெறுப்பை வழிவகுக்கின்றது. இந்த மனக்கசப்பு நமது கண்ணோட்டத்தை நியாயமற்ற முறையில் சார்புடையதாக ஆக்குகிறது மற்றும் வெறுப்பாகவே வளர்கிறது.

இந்த வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வெறுப்பு பழிவாங்குதலுக்கு வழிவகுக்கும். இது வாய்மொழி துஷ்பிரயோகம் அல்லது வன்முறை வடிவத்தில் இருக்கலாம். வெளிப்படுத்தப்படாத கோபமும், கட்டுப்பாடற்ற வெறுப்பும் கசப்பாக மாறலாம். இந்த கசப்பு தன்னைத்தானே அழித்துக் கொள்ளும். எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மனச்சோர்வடைந்த எண்ணங்களால், ஒரு நபர் தனக்குத்தானே தீங்கு செய்து கொள்ள வாய்ப்புண்டு, அதாவது தற்கொலை செய்து கொள்ளலாம்.

கோபம் வெறும் ரேமில் இருக்கும்போது, கணிணியை ஆப் செய்தவுடன் (சூரியன் அஸ்தமிக்கிறதற்கு), அது அழிக்கப்பட்டு குப்பையில் போடப்படும். அதை ஒரு ஹார்ட் டிஸ்கில் சேமித்து சேமித்து வைத்தால், அது நம் சொந்த வாழ்க்கை, நோக்கம் மற்றும் அருட்பணிக்கு ஆபத்தாகிவிடும். கோபம் இரத்த அழுத்தம், பதட்டம் மற்றும் தலைவலி போன்ற உடல் உபாதைகளுக்கும் வழிவகுக்கும்.

கோபத்தை கைவிடுதல், மனந்திரும்புதல், ஒப்புரவாகுதல் என்பது மகிழ்ச்சியைத் தரும் அதே வேளையில் கோபத்தை நம் நினைவில் வைத்திருப்பது வெடிக்க இருக்கும் கண்ணிவெடியை மிதிப்பது போன்றது. சூரியன் மறையும் போது கோபம் குறையவில்லை என்றால், பாவம் ஆழமாக இறங்கி ‘கசப்பின் வேர்’ ஆகிவிடும். ஏனெனில் சூறாவளியைக் காட்டிலும் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எளிது.

கோபத்திற்கான மாற்று மருந்தே மன்னிப்பு. எளிமையாகச் சொன்னால், தேவன் நம்மை பரந்த மனப்பான்மையோடு மிக தாராளமாக மன்னித்திருக்கிறார், அந்த பெருந்தன்மையையும் இரக்கத்தையும் மற்றவர்களுக்கு காட்டலாமே. மன்னிப்பு நம் மனதையும் இதயத்தையும் அமைதிப்படுத்துகிறது.

சூரியன் மறையும் போது நமது கோபமும் குறைந்து குப்பையில் சேருமா?

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download