திருட்டை அடையாளம் காணுதல்

எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மூலம் வந்த செய்தியின் இணைப்பை ஒருவர் கிளிக் செய்து, அவருடைய பணத்தை இழந்தார்.  அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டது.  சிறந்த தொழில்நுட்ப அறிவுடன் நிகழ்த்தப்படும் இந்த மாதிரி அடையாளத் திருட்டால் பலர் தங்கள் பணத்தை இழக்கின்றனர்.  அடையாளத் திருட்டு என்ற வெள்ளை காலர் குற்றம் (உடலுழைப்பு அற்ற குற்றங்கள்) பல மடங்கு அதிகரித்துள்ளது, இதுபோன்ற குற்றங்களால் சைபர் கிரைம் போலீசார் திணறுகின்றனர்.  (யோவான் 10:10)ல் சொல்வது போல சாத்தான் திருடவும், கொல்லவும், அழிக்கவும் வருகிறான். அவன் இந்த நாட்களில் அதிவேகமாக இருக்கிறான் மற்றும் நுட்பமாக எதையும் மற்றும் எல்லாவற்றையும் திருடுகிறான் (வெளிப்படுத்துதல் 12:12).

அப்பாவித்தனத்தை திருடுதல்:
பாம்பின் வடிவில் வந்த தந்திரமான சாத்தான், முதல் தம்பதியினரை கீழ்ப்படியாமைக்குள் வஞ்சித்து அவர்களின் அப்பாவித்தனத்தை திருடினான் (ஆதியாகமம் 3). தேவனைப் போல் இருப்பது என்னவென்று தெரியாதவர்கள் அதற்காக ஆசைப்பட்டு ஏமாற்றப்பட்டனர்.  துரதிர்ஷ்டவசமாக, அது கீழ்ப்படியாமை, கலகம் மற்றும் மனிதகுலத்தின் வீழ்ச்சியில் விளைந்தது.

வார்த்தையை திருடுதல்:
விதைப்பவரின் உவமையில், வழியில் விழும் விதைகளை பறவைகள் உண்ணும்.  ஒரு நபர் செவிசாய்க்கவில்லை, சிந்திக்கவில்லை, பிரதிபலிக்கவில்லை மற்றும் பெறவில்லை என்றால் தேவனின் வார்த்தை சாத்தானால் எடுக்கப்படுகிறது (மத்தேயு 13:19).

அமைதியையும் உறுதியையும் திருடுதல்:
விசுவாசிகள் சாத்தானால் தொடர்ந்தும் இடைவிடாமலும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.  இந்த நச்சரிக்கும் குற்றச்சாட்டு ஒரு விசுவாசியின் அமைதியையும் மன்னிப்பின் உறுதியையும் பறித்துவிடும்.  இருப்பினும், ஞானமுள்ள விசுவாசிகள் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் சாட்சியின் வார்த்தையினாலும்  குற்றஞ்சாட்டப்பட்ட சாத்தானை ஜெயிக்கிறார்கள் (வெளிப்படுத்துதல் 12:10).

ஜீவியத்தைத் திருடுதல்:
"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்" (1 பேதுரு 5:8). அவன் ஆரம்பத்திலிருந்தே ஒரு மனுஷ கொலைபாதகன் (யோவான் 8:44). நித்திய ஜீவனைப் பெறாதபடிக்கு, நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தை  கொல்வதே அவனுடைய நோக்கம் (மத்தேயு 10:28).

விசுவாசத்தைத் திருடுதல்:
பரிசுத்தவான்களின் விசுவாசத்தைத் திருடுவதால் சாத்தான் மனிதர்களின் நித்திய எதிரி.  யோபுவின் மீது சாத்தானின் தாக்குதலின் நோக்கம் தேவன் மீது அவன் கொண்டிருந்த விசுவாசத்தைத் திருடுவதாகும்.  பேதுருவிடமிருந்தும் விசுவாசத்தைத் திருட விரும்பினான் (லூக்கா 22:31-34).

வாய்ப்புகளைத் திருடுதல்:
எலிமா என்ற மந்திரவாதியைப் போலவே, சுவிசேஷத்தைக் கேட்பதற்கான வாய்ப்புகளை மக்களிடமிருந்து திருட சாத்தான் தன் மக்களைப் பயன்படுத்துகிறான் (அப்போஸ்தலர் 13:10). சத்தியத்திலிருந்து மக்களை திசை திருப்புகிறான்.

சாத்தானின் அடையாள திருட்டுக்கு எதிராக நான் விவேகமாகவும் விழிப்புடனும் இருக்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download