நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கபபட்டவன்/ள்

பிரணவ் சீனிவாசன் ஏழரை மாதக் கருவாக இருந்தபோது, ​​அவரது பெற்றோர் இந்தியக் குடியுரிமையை நிராகரித்து சிங்கப்பூர் குடியுரிமையைப் பெற்றனர். அவர் கொஞ்சம் பெரியவரானதும் நிராகரிக்கப்பட்ட இந்திய குடியுரிமையை விரும்பினார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்தார்.  நீதிபதி அனிதா சுமந்த் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கி சாதகமான தீர்ப்பை வழங்கினார்.  தீர்ப்பில் கூறியதாவது; "ஒரு ஏழரை மாதக் கரு, அதாவது 19.12.1998 அன்று அது குழந்தை என்ற நிலை, இந்த நிலையில், அவர் தனது பெற்றோரின் குடியுரிமையைப் பெறுகிறார் (DTNext மே 18, 2022). பிறக்காத குழந்தை என்பது ஒரு நபர் அல்ல என்றும் அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் பலர் நினைக்கிறார்கள்.  கருவில் இருக்கும் குழந்தையின் உரிமை தாயிடம் உள்ளது, கருக்கலைப்பு உட்பட என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் நம்புகிறார்கள்; ஆனால் அப்படியல்ல". 

வாழ்க்கை புனிதமானது:
கரு என்றால் தேவ சாயலில் படைக்கப்பட்ட நபர் என்று பொருள்.  இந்த வாழ்க்கை ஒரு இரசாயன எதிர்வினை அல்லது இயற்கை விதி (செயல்முறை) அல்ல, மாறாக இது தேவனின் செயல். 

தேவனின் சிருஷ்டிப்பு:
ஒவ்வொரு மனிதனும் தேவனால் படைக்கப்பட்டவன். "நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது" (சங்கீதம் 139: 13-16) என்பதாக தாவீது ராஜா பாடுகிறார்.  

கொலை:
பிறக்காத குழந்தையின் அருந்தனிப்பண்பை மறுப்பது குழந்தையின் உரிமைகளை நசுக்குவதற்கு வழிவகுக்கிறது.  வயிற்றில் இருக்கும் கருவிற்கு வாழ உரிமை உண்டு, நேசிக்கப்படுவதற்கும் பராமரிக்கப்படுவதற்கும் உரிமை உண்டு.  ஒரு மனித நீதிமன்றம் குடியுரிமைக்கான உரிமையை வழங்கும்போது, தேவன் கண்ணியம், வாழ்க்கை, அர்த்தம் மற்றும் நோக்கத்தை வழங்குகிறார்.  மறுப்பது அல்லது நிராகரிப்பது அல்லது கருக்கலைப்பு என்பது பத்து கட்டளைகளை மீறுவதாகும்: ஆம், "கொலை செய்யாதிருப்பாயாக" (யாத்திராகமம் 20:13).

மனித வாழ்வின் புனிதம் எனக்கு புரிகிறதா?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download