நரகம் ஒரு நிஜமான இடம்

ஐசுவரியவான் மற்றும் லாசருவின் உவமை, மரணத்திற்குப் பின் இருக்கும் வாழ்க்கையைப் பற்றி கற்பிக்கிறது (லூக்கா 16:19-31).

இரண்டு வாழ்வு:
பணக்காரர் மற்றும் ஏழை லாசரு இருவரும் ஒரே தெருவில் வாழ்ந்தனர், ஒருவர் தெருவில், மற்றொருவர் மாளிகையில்.  பணக்காரர் நல்ல பளபளப்பான உடையில், ஏழை கந்தல் உடையில்.  பணக்காரனின் மேஜை எல்லாம் ஆடம்பரமான உணவுகள் நிறைந்திருந்தன, லாசருவிடம் சிந்தியதும் சிதறியதுமாக எஞ்சியவை மட்டுமே இருந்தன.

இரண்டு மரணம்:
மரணம் உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும் பிரிக்கிறது.  மரணம் நித்தியத்தின் பாதையையும் குறிக்கிறது; அது பரலோகமா அல்லது நரகமா எது இலக்கு என காண்பிக்கிறது.  பணக்காரர் இறந்தபோது, ​​அநேகமாக, ஒரு பெரிய இறுதி சடங்கு நடந்திருக்கும்; 21 முறை துப்பாக்கி சூடு வணக்கம் மற்றும் நல்ல பளிங்கு கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பான்.  ஏழை லாசரு நடைபாதையில் வசிப்பவர்களுக்கு எப்படி இறுதிச்சடங்கு நடக்குமோ அப்படி பரிதாபமாக நடந்திருக்கும், ஆனால் அவரது ஆத்துமா தேவதூதர்களால் ஆபிரகாமின்  மடிக்கு கொண்டுபோய் விடப்பட்டது (லூக்கா 16:22).

 அடையாளம் காணுதல்:
 பணக்காரன் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தாலும், அவன் நரகத்தில் வேதனைப்பட்டான்.  சுவாரஸ்யம் என்னவெனில், அவன் ஆபிரகாமைப் பார்க்கவும் அடையாளம் காணவும் முடிந்தது.  பூமியில் போதிய உணவோ, தங்குவதற்கு இடமோ இல்லாத லாசருவிற்கு முன்னுரிமையான இடம் கிடைத்திருப்பதைக் கண்டு பணக்காரன் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்.

நினைவில் கொள்ளுதல்:
இறந்த பிறகு ஞாபக மறதி ஏற்படவில்லை. ஆம், பூமியில் பணக்காரன் தான் வாழ்ந்த சிலாக்கியமான வாழ்க்கையையும் லாசருவின் பரிதாபகரமான வாழ்க்கையையும் தெளிவாக நினைவுகூர முடியும்.

கோரிக்கைகள்:
நரகத்தில், பணக்காரன் பேச முடிந்தது.  அவன் இரண்டு கோரிக்கைகளை வைத்தான்;  இரண்டும் நிராகரிக்கப்பட்டன.  முதலில், லாசரு தன் விரலை தண்ணீரில் நனைத்து, தன்னுடைய வறண்ட நாக்கை நனைக்க ஆபிரகாம் அனுமதிக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அதற்கு ஆபிரகாம் அவர்களுக்கும் நரகத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருப்பதாகவும், இருபுறமும் கடக்க முடியாது என்றும் விளக்கினார்.

நம்பிக்கையின்மை:
இரண்டாவதாக, பணக்காரனின் சகோதரர்களுக்குப் பிரசங்கிக்க, அவர்கள் நரகத்தை அடையாதபடிக்கு, லாசரு ஒரு மிஷனரியாக மீண்டும் பூமிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றான்; அதுவும் நிராகரிக்கப்பட்டது.  உலகில் வாழும் மக்கள் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசிகளின் சத்தத்தையும் கேட்டு, விசுவாசிக்கவில்லை மற்றும் கீழ்ப்படியவில்லை என்றால், லாசரு போன்ற ஒருவன் மரித்தோரிலிருந்து எழுந்து அவர்களுக்குப் பிரசங்கம் செய்தாலும் அவர்கள் நம்ப மாட்டார்கள் என்றும் ஆபிரகாம் விளக்கினார்.

 நிஜம்:
 நரகம் என்பது கற்பனையான இடம் அல்லது மெய்நிகர் இடம் அல்ல, ஆனால் நற்செய்தியை நிராகரிப்பவர்கள் முடிவடையும் ஒரு உண்மையான இடம்.

 பரலோகத்தில் இருப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download