புகழும் அதிகாரமும்

அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்கள் தாங்கள் பிரபலமாக இருக்க விரும்புகிறார்கள். லூசிஃபர் மற்றவர்களின் வழிபாடு, பாராட்டு மற்றும் கைதட்டலை விரும்பியதால், சில தலைவர்களும் அதையே பின்பற்றினர் (ஏசாயா 14:12-14). அத்தகைய அதிகார லட்சியங்களுக்கு ஆமான் ஒரு சிறந்த உதாரணம். தான் புகழப்படுவதற்கு தகுதியான சிறந்த ஆளுமையானவன் என்று அவனே மனதில் கற்பனை செய்தான். அகாஸ்வேரு ராஜா யாரை கௌரவிக்க விரும்புகிறார் என்று தெரியாமல், அந்த இடத்தில் தன்னை முன்னிறுத்தி, தனது ரகசிய விருப்பத்தை பட்டியலிட்டான் (எஸ்தர் 6: 6-9).

1) அரச அங்கி:
ஆமான் அரசனின் ஆடையை அணிய விரும்பினான். அவன் முழு சாம்ராஜ்யத்திலும் சிறந்த உடையை விரும்பினான். டிஸைனர் ஆடைகள் பிரபலத்தைத் தேடும் ஆளுமைகளால் அணியப்படுகின்றன.

2) அரச குதிரை:
அரசனால் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் குதிரையில் சவாரி செய்ய ஆமான் விரும்பினான். இன்றும், தலைவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட  BMV (Bureau of Motor Vehicles) விரும்பப்படுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி சுவிசேஷகர்கள் கூட இத்தகைய சொகுசு வாகனங்களை விரும்புகிறார்கள். அத்தகைய பொருள்களுக்கு ஆசைப்படுவது பத்தாம் கட்டளையை மீறுவதாகும்.

3) அரச கிரீடம்:
ஆமான் அதிகாரத்தையும் செல்வாக்கையும் நிறுவும் அரச கிரீடத்தைப் பெற விரும்பினான். நவீன உலகில், அடைமொழிப் பெயர்களை பழைய காலத்தின் கிரீடங்களுடன் ஒப்பிடலாம். பல சர்வாதிகாரிகள் நீளமான மற்றும் தங்கள் பெயர்களுக்கு முன்பதாக அழைப்பதற்கு ஏற்ப பட்டங்களைத் தங்களுக்கு தாங்களே வழங்கினர்.

4) அரச சேவை:
பேரரசின் உயர்மட்ட அதிகாரிகள் மரியாதைக்குரிய நபரை அலங்கரித்து, வஸ்திரங்களைப் பிடித்து கொண்டும், பின்னர் குதிரையின் மேல் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆமான் விரும்பினான். பணக்காரர்கள் மற்றும் செல்வாக்குள்ளவர்களைச் சுற்றி கமாண்டோக்கள் துப்பாக்கியால் நிற்பது ஒரு நிலை அடையாளமாக கருதப்படுகிறது.

5) அரச ஊர்வலம்:
அரண்மனையில் ஆடை ஒத்திகையில் ஆமான் திருப்தியடையவில்லை, அது நகர சதுக்கத்தில் ஒரு பொது நிகழ்வாக இருக்க வேண்டும். பிரபலம் விரும்புவர்கள் வெகுஜன ஊடகங்களில் முக்கிய நேரத்தை ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள். அவர்களின் சத்தம் சமூக ஊடகங்களில் வைரலாகும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

6) அரச பிரகடனம்:
மௌன ஊர்வலம் போதாது, இவர்தான் மரியாதைக்குரியவர் என்று அதிகாரிகள் பிரகடனம் செய்ய வேண்டும். இத்தகைய பாதுகாப்பற்ற ஆளுமைகளுக்கு அனைத்து வகையான மிகைப்படுத்தல்களாலும் முகஸ்துதி செய்யும் அண்டிப்பிழைப்போர் தேவை.

மிகவும் வெறுக்கப்பட்ட மொர்தெகாய்க்கு ஆமான் பெற விரும்பியதைச் செய்யும்படி தேவன் ஒரு தண்டனையை அளித்தார். தேவனின் வழிகள் சாந்தகுணமுள்ளவர்களையும் தாழ்மையுள்ளவர்களையும் உயர்த்துவது என்பதாக உள்ளது.

அதிகாரம் மற்றும் பிரபல்யத்திற்காக நான் ஆசைப்படுகிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download