தங்கத்திற்கான பரபரப்பு!


சென்னையில் தங்க நகைகள் விற்கும் சில கடைகள் அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டன.  ஏன் இவ்வளவு அதிகாலை என்று பார்த்தால்; அன்று அக்ஷய திருதியை நாள் அதாவது தங்கம் வாங்குவதற்கு அன்று ஏற்ற நாளாக கருதப்பட்டது. அன்றைய தினம் தங்கத்தை வாங்குபவர்கள், கோடீஸ்வரராக மாறுவார்கள் அல்லது நிறைய தங்கத்தை வைத்திருப்பார்கள் என்பதாக ஒரு நம்பிக்கை.  படுபயங்கரமான விளம்பரங்களால், ஏழை மக்கள் கூட குறைந்தபட்சம் சிறிய தங்க நகையையாவது வாங்க வேண்டுமென முயற்சிக்கின்றனர். முந்தைய ஆண்டுகளில் குறிப்பிட்ட நாளில் தங்கத்தை வாங்குவதன் மூலம், எந்தவொரு நபராவது கோடீஸ்வரர் ஆனார்களா என்பதை அறிய விரும்பும் சில பகுத்தறிவாளர்களும் உள்ளனர்.

செல்வந்தராக ஆசை:
"ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்" (1 தீமோத்தேயு 6:9). இந்த ஆசை மனிதர்களை பைத்தியமாக்குகிறது. இது ஒரு மான் கானல்நீரைப் பின்தொடர்வது போன்றது. தண்ணீர் எட்டக்கூடிய தூரத்தில் தான் இருக்கிறது என்பதாக நினைக்கிறது, ஆனால் இல்லை. இப்படியாக அனைத்து ஆற்றலையும் செலவழிக்கிறது மற்றும் தாகத்தால் இறக்கவும் கூடும். அத்தகைய ஆசை பயனற்ற நாட்டங்களையும், லாபமற்ற முயற்சிகளையும் அழிவுக்கும் கேட்டுக்கும் வழிவகுக்கும் என்று பவுல் எழுதுகிறார்.

கவனம் மற்றும் பாதுகாப்பு:
மக்கள் தங்கள் பாதுகாப்பு செல்வத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். தங்கம் சேமிப்பது சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படலாம் மற்றும் அதை பணமாக மாற்றலாம்.  இருப்பினும், வேதாகமம் இப்படியாக எச்சரிக்கிறது; “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்" (நீதிமொழிகள் 11:28). துரதிர்ஷ்டவசமாக, இன்று பல இடங்களில் தங்கத்தை வைத்திருப்பது பெரும் பாதுகாப்பின்மையையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.  ஆண்டவர் இயேசு கூறியது போல், இத்தகைய பொக்கிஷங்கள் திருடர்களால் குறிவைக்கப்படுகின்றன (மத்தேயு 6:19-21). ஆம், தங்கச் சங்கிலிகளை அணிந்த பெண்களிடமிருந்து திருடர்கள் பறித்துச் சென்ற சம்பவங்களும் ஏராளம். 

அந்தஸ்து:
சிலருக்கு தங்கம் மற்றும் வைரம் அந்தஸ்து சின்னமாக கருதப்படுகிறது.  தங்க கடிகாரங்கள் அல்லது வைரம் பதித்த பதக்கங்கள்/மோதிரங்கள் மற்றும் ஆடைகளை அணிந்துகொள்வதெல்லாம் தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்துவதாகும்.

தங்கத்தால் அமைக்கப்பட்ட தெருக்கள்:
கிறிஸ்துவர்களுக்கு நித்திய நம்பிக்கையும் பரலோகத்தில் நித்திய வீடும் இருப்பதாக வேதாகமம் கூறுகிறது (யோவான் 14:1). "பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது" என வெளிப்படுத்துதல் 21:21ல் வாசிக்கிறோமே. 

பொக்கிஷங்களும் இதயமும்:
பொக்கிஷங்கள் இருக்கும் இடத்தில் நம் இதயங்களும் இருக்கும். மேலானதை நாடுவது என்பது ஒரு உன்னதமான ஆவிக்குரிய நாட்டம். "நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்" (கொலோசெயர் 3:1). 

நான் கிறிஸ்துவுக்குள் அழிந்துபோகும் பொருட்களை நாடுகிறேனா அல்லது அழியாத நித்திய செல்வங்களைப் பின்தொடர்கிறேனா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download