வெற்று கனவு இல்லம்

ஒரு பிரபல நடிகர் ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்ட விரும்பினார். அதன் திட்டம், கட்டட அளவு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றைச் செய்ய சிறந்த கட்டட வடிவமைப்பாளர் அழைக்கப்பட்டார்.  கட்டி முடிக்கும்போது அது ஒரு ஏழு நட்சத்திர ஹோட்டல் போல நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பது கனவு.  ஆனால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிட செயல்முறை நீட்டிக்கப்பட்டது. பரிதாபம் என்னவென்றால் வீடு கட்டி முடிப்பதற்குள் அவர் இறந்தார்.  அவர் தனது கனவு வீட்டைக் காணாமலேயே இறந்துவிட்டார், அதில் ஒரு நாள் கூட வாழ முடியவில்லை.  தாவீது இப்படியாக எழுதுகிறான்; "வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான்” (சங்கீதம் 39:6).

வீண் அலுவல்: 
வாழ்க்கை குறுகியது என்ற உண்மையைப் புறக்கணித்து, மக்கள் பல விஷயங்களில் ஈடுபாடாக இருக்கிறார்கள்.  வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் (பிஸியாக) பரபரப்பாக இருப்பது ஆபத்தானது.  அனைத்து மனித திட்டங்கள், ஆர்வங்கள், செயல்பாடுகள், கனவுகள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகள் விரைவில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். நம் பார்வையிலிருந்தும் மற்றும் நினைவகத்திலிருந்தும் விரைவில் விஷயங்கள் காணாமல் போய் விடும்.  

நிழல் போல்:  
உண்மையில், உலகம் நிழல்களின் நிலம் போன்றது, அதேசமயம் பரலோகம் நிஜத்தின் நிலம்.   காணக்கூடிய உலகம் தற்காலிகமானது, பரலோகம் நித்தியமானது.    

செல்வத்தைக் குவித்தல்:  
ஒவ்வொரு நபரும் கடினமாக உழைக்கிறார்கள், புத்திசாலித்தனமாக வேலை செய்கிறார்கள் அல்லது செல்வத்தைப் பெற தீய குறுக்குவழிகளையும் பயன்படுத்துகிறார்கள்.  சிலது முறையான செல்வம், சிலது முறையற்ற செல்வம்.  துரதிர்ஷ்டவசமாக, பலர் தங்கள் செல்வத்தை அனுபவிக்கும் முன்பே இறந்துவிடுகிறார்கள். அது மாத்திரமல்ல, இறுதியில் சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் இது பெற தகுதியற்ற மற்றும் நன்றியற்ற நபர்களுக்கு செல்கிறது.  

ஒழுக்கமுள்ள சீஷர்கள்:  
இதற்கு நேர்மாறாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தங்கள் மனப்பான்மை, முன்னுதாரணங்கள், உறவுகள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் நித்திய கவனத்துடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளனர்.   முதலில் , இந்த உலகில் அவர்களுக்கு சமாதானம், அர்த்தம் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் ஒரு வாழ்க்கைக்கான நோக்கம் உள்ளது.   இரண்டாவது , அவர்கள் விசுவாசமுள்ள உக்கிராணக்காரர்கள், தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதில்லை அல்லது பொறாமை கொள்வதில்லை, மேலும் போதுமென்ற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம் என்பதை அறிந்து கொண்டவர்கள் (1 தீமோத்தேயு 6:6). மூன்றாவது , மெத்தடிஸ்ட் சர்ச் ஸ்தாபகரான  ஜான் வெஸ்லி கூறியது போல்: உங்களால் முடிந்த அனைத்தையும் சம்பாதியுங்கள், உங்களால் முடிந்த அனைத்தையும் சேமியுங்கள், உங்களால் முடிந்த அனைத்தையும் கொடுங்கள்.  நான்காவது , தேவனுக்கும், அவருடைய ஊழியங்களுக்கும், அருட்பணிகளுக்கும், ஏழைகளுக்கும் கொடுப்பதன் மூலம் அவர்கள் சொர்க்கத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைக்கிறார்கள் (மத்தேயு 6:19-21). யோவான் 14: 1-3ல் கூறியது போல், தேவன் அவர்களுக்காக பரலோகத்தில் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி, அவர்களை என்றென்றும் அழைத்துச் செல்கிறார். 

 நித்திய வீட்டை நான் வாஞ்சித்து விரும்புகிறேனா? அல்லது என் நோக்கம் உலக காரியங்களா 
 

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download