ஒவ்வொரு முழங்கால்களும் முடங்க வேண்டும்

நாத்திகர்கள், அஞ்ஞானவாதிகள், பகுத்தறிவுவாதிகள் மற்றும் பிற கடவுள் எதிர்ப்பாளர்களை ஆதரிப்போர் எனப் போன்றோர் கடவுள் என்பது யார்? நான் ஏன் அவர் முன் தலைவணங்க வேண்டும்? என்கிறார்கள்; அதிலும் சிலர், "எங்களுக்கு கடவுளாக நாங்கள் , தேர்ந்தெடுக்கவில்லையே, அவர் எப்படி எங்களை ஆள முடியும்?" ஆயினும்கூட, அவர் முன் பணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. பவுல் எழுதுகிறார்: “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய அவருக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்" (பிலிப்பியர் 2:9-11). கர்த்தருடைய நாள் அவிசுவாசிகள் அனைவருக்கும் ஒரு பயங்கரமான நாள்.

1) அவரை மறுதலிக்க முடியாது:
மகிமையாய் வரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்கும்போது, அவர்களால் ஒருபோதும் அவரை மறுதலிக்க முடியாது. உலகில் அவர்கள் வரலாறு, சான்றுகள், நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களை மறுக்க முடியும்; ஆனால் அவர்கள் அவருக்கு முன்பாக நிற்கும்போது, அவரை எப்படி மறுதலிக்க முடியும்?

2) அவரை மறுக்க முடியாது:
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலகம் முழுமைக்கும் மற்றும் ஒவ்வொரு தனிமனிதன் மீதும் அதிகாரம் கொண்டவர். அவரை எதிர்க்கும் சக்தியோ, அதிகாரமோ, தைரியமோ அவர்களுக்கு இல்லை.

3) அவரை தோற்கடிக்க முடியாது:
உலக சர்வாதிகாரிகள் சபைகளைத் தாக்கினர், பலரை சிறையில் அடைத்தனர், தேவாலயங்களை இழிவுபடுத்தினர் மற்றும் புனிதர்களைக் கொன்றனர். இப்போது, மகிமையின் தேவனாம் கிறிஸ்துவுக்கு முன்பு அவர்கள் முற்றிலும் உதவியற்ற மற்றும் துயர்மிக்க ஜீவனாகிறார்கள். 

4) அர்ப்பணிப்பதை தாமதப்படுத்த முடியாது:
அவர்கள் அர்ப்பணிப்பதைத் தாமதப்படுத்தவோ அல்லது அவர்களின் விதியை அல்லது அழிவை ஒத்திவைக்கவோ எந்த வழியும் இல்லை. அவர்களின் இறுதி தீர்ப்புக்கான நேரம் வந்து விட்டது.

5) ஏமாற்ற முடியாது:
உலகில், அவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற ஏமாற்றுவார்கள், கட்டாயப்படுத்துவார்கள். இப்போது எல்லா விஷயங்களும் அம்பலமாகிவிட்டன. "மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்" (கலாத்தியர் 6:7). 

6) ஏமாற்ற முடியாது:
விரைவான திடீர் செயல்பாட்டினால் அவர்களால் தீர்ப்பைத் தவிர்க்க முடியாது. அவர்கள் மலைகளை தங்கள் மீது விழும்படி கூறுவார்கள். மலைகள் அதற்கு இணங்குமா என்ன? 

7) மரிக்க முடியாது:
அவர்கள் இறக்க விரும்பினாலும், அவர்களால் அது முடியாது. அவர்கள் "இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்" (வெளிப்படுத்துதல் 21:8). 

அவரை ஏற்றுக் கொண்டு அவருடைய மகத்துவத்திற்குள்ளும் பாதுகாப்பிற்குள்ளும் வருவதற்கான நாள் இதுவே.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் அடைக்கலம் புகுந்துள்ளேனா? (நீதிமொழிகள் 18:10)

Author : Rev. Dr. J. N. Manokaran



Topics: Daily Devotions Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download