தாமதமான கீழ்ப்படிதல்

நல்ல எண்ணமெல்லாம் நல்ல முடிவுகள் அல்ல.  தவறான மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை தேவ கிருபையால் சரியான முடிவுகளாக மாற்ற முடியும்.  ஆண்டவர் கூறிய திராட்சை தோட்ட உவமையில், இரு மகன்களும் சிறந்தவர்கள் அல்ல, ஒருவன் நயவஞ்சகன், மற்றொருவன் கீழ்ப்படிதலில் தாமதமாக இருந்தான் (மத்தேயு 21:28-32).

தந்தையின் முயற்சி:
மகன்கள் அதிகாலையில் எழுந்திருக்கவில்லை, அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை.  மாறாக, தன் மகன்களிடம் சென்றது தந்தைதான்.  ஆம், தேவன் முதலில் நம்மை நேசித்தார்.  பிதாவாகிய தேவன் தனது மகனை உலகிற்கு அனுப்பினார்.  உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மகன்கள் மீதான அதிகாரம்:
மகன்கள் மீது தந்தைக்கு அதிகாரம் இருந்தது, அவர்களை வேலைக்கு அனுப்புவது அவருடைய பொறுப்பு.  தேவன் தனது பிள்ளைகளாக இருக்க சீஷர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் (யோவான் 1:12). தேவன் சிருஷ்டிகராகவும், இரட்சகராகவும், ஆண்டவராகவும் தம் மக்கள் மீது அதிகாரம் கொண்டவர்.  அவர் இந்த உலகில் தனது ஊழியம் மற்றும் பணிக்காக அவர்களை அழைக்கிறார், நியமிக்கிறார், அனுப்புகிறார், பயன்படுத்துகிறார்.  தந்தையின் இதயத்தை மகிழ்விக்கும் பொறுப்பு மகன்களுக்கு உள்ளது.  "ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்" (நீதிமொழிகள் 15:20).  

 போ:
தேவன் எல்லா மனிதர்களையும் உலகிற்கு அனுப்பியுள்ளார்.  இந்த உலகத்திற்கு வருவதற்கான கோரிக்கையை கேட்கவோ அல்லது விண்ணப்பிக்கவோ எந்த மனிதனும் முன் இருந்ததில்லை.  அனைத்து சீஷர்களும் தேவனின் உலகளாவிய திட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மற்றும் பொருத்தமான நேரத்தில் உலகில் பயன்படுத்தப்படுகிறார்கள்.

 பணி:
 தேவன் எல்லா மனிதர்களையும் பணி செய்ய அழைத்தார், இருப்பினும், அவர் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தனது பிள்ளைகளை அழைத்தார்.  உண்மையில், தேவன் ஒவ்வொரு நபருக்கும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை வைத்திருக்கிறார்.  ஒவ்வொரு விசுவாசியும் தேவனின் நோக்கத்தை நிறைவேற்ற ஒரு சூழலில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உணர வேண்டும்.

இன்று:
'இன்றே' இரட்சணிய நாள் என்று வேதாகமம் போதிக்கிறது (2 கொரிந்தியர் 6:2). சிலர் அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன என்று கூறி ஒத்திவைக்க விரும்புகிறார்கள்.  ஒவ்வொரு நாளும் ஒரு அவசரமான நாள் மற்றும் இரட்சிப்பின் நாள் என்பதை உணர்வோம் (யோவான் 4:35).

திராட்சைத் தோட்டம்:
திராட்சைத் தோட்டம் அவருடையது, அவரே அனைத்திற்கும் முழுமையான உரிமையாளர்.  அனைத்து விசுவாசிகளும் ஒரே திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள், ஆனால் வெவ்வேறு பங்களிப்பைக் கொண்டுள்ளனர்.  ஒருவர் விதைக்க, ஒருவர் தண்ணீர் பாய்ச்ச, ஒருவர் அறுவடை செய்கிறார், ஆனால் விளையச் செய்பவர் என்னவோ தேவன் மாத்திரமே (1 கொரிந்தியர் 3:6).

 இரண்டு பதில்கள்:
தோட்டத்தில் வேலை செய்ய தந்தை கூறிய போது, மூத்த மகன் மாட்டேன் என்றான், பின்பு மனஸ்தாபப்பட்டு வேலைக்கு சென்றான்.  இளைய மகனோ பணிவுள்ளவனாக மற்றும் கீழ்ப்படிதல் உள்ளவனாக 'போகிறேன் ஐயா' என்று நடித்தான், ஆனால் போகவில்லை. (மத்தேயு 21:28-30)

 நான் கீழ்ப்படிகிறேனா அல்லது கீழ்ப்படிவது போல் நடிக்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்  



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download