தைரியமான எதிர்ப்பு

பல தலைவர்கள் தங்களுடைய தலைமையில் இருப்போரின் ஒழுக்கக்கேடான அல்லது சட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது தவறு செய்தால் அவர்களை எதிர்க்கத் துணிவதில்லை.  சிலர் உண்மையைப் பேசி முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகிறார்கள்.  படைத்தலைவன் யோவாப் ஒரு வித்தியாசமான தலைவன்.  அவன் தாவீதுக்கு மிகவும் உண்மையுள்ளவனாக இருந்தான். யோவாப், தனது வரம்பைத் தாண்டி, தாவீதை பலமுறை ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பாதுகாத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  யோவாப் நாத்தானைப் போல ஒரு தீர்க்கதரிசி அல்ல, ஆனால் தாவீதின் சம்பளப் பட்டியலில் உள்ள ஒரு படைத்தலைவன்.

தாவீதின் துக்கம்:
தாவீதின் மகன் அப்சலோம் அவனுக்கு எதிராக எழுந்தான்.  அவனது சதி மிகவும் தந்திரமானது மற்றும் திறம்பட செய்யப்பட்டது.  தாவீது மற்றும் அவனது உயரடுக்கு அமைச்சரவை மற்றும் படைகளும் வனாந்தரத்திற்கு தப்பி ஓட வேண்டியிருந்தது.  ஆனாலும், தாவீதும் அவனுடைய ஆட்களும் எதிர்த்துப் போராடினார்கள்.  ஒரு அன்பான தகப்பனாக, அப்சலோம் உள்நாட்டுப் போரில் காப்பாற்றப்பட வேண்டும் என்று தாவீது விரும்பினான்.  பின்னர், யோவாப், அவன் கொல்லப்பட்டதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்தான்  (2 சாமுவேல் 18:1-33). தனது மகனின் மரணத்தைக் கேட்டதும், உள்நாட்டுப் போரில் கிடைத்த வெற்றியைக் கொண்டாட தாவீது விரும்பவில்லை, அதற்குப் பதிலாக இறந்த மகனுக்கு துக்கம் அனுசரிப்பதாக அறிவித்தான்.  யோவாப் தாவீதை எதிர்கொண்டு, சிம்மாசனத்தில் அமர்ந்து வெற்றியின் சந்தோஷத்தை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.  தாவீதும் கீழ்ப்படிந்தான் (2 சாமுவேல் 19:1-8).

தாவீதின் பெருமை:
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, தாவீது பலம் கொண்டவனானான்.  அவன் தன்னை தானே பாராட்டி கொள்ள விரும்பினான், எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க விரும்பினான்.  தேவன் மாத்திரமே அவருடைய மக்களின் உரிமையாளர், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், கணக்கிடப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் மீட்கும் தொகை செலுத்தப்பட வேண்டும், இல்லையெனில் ஒரு வாதை உண்டாகும் (யாத்திராகமம் 30:12). பெருமையால் தூண்டப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவனின் கோபத்தை வரவழைக்கும்.  இந்த யோசனை தேவ விருப்பத்திற்கு எதிரானது என யோவாப் எதிர்ப்பு தெரிவித்தான்.  தாவீது ஏன் எண்ண வேண்டும் என்று அவன் வாதிட்டான், தேவன் அவரின் சித்தத்தின்படி தனது ஜனங்களைப் பெருக பண்ணுகிறார் (1 நாளாகமம் 21: 3-4).

தாவீதின் பிடிவாதம்:
ஆனால் தாவீது  சிலவேளைகளில் ஆதிக்கம் செலுத்தினான், யோவாப் அவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.  யோவாப் இஸ்ரவேலைக் காப்பாற்ற விரும்பினான்.  அவன் ஏறக்குறைய பத்து மாதங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்தான்.  கவனமாக, ஒரு சிலரைப் பாதுகாப்பதற்காக, அவன் லேவி மற்றும் பென்யமீன் கோத்திரத்தை எண்ணிக்கையிலிருந்து விட்டுவிட்டான்  (1 நாளாகமம் 21:5-8). எழுபதாயிரம் பேரை அழித்த கொள்ளைநோய்க்கு தாவீது காரணம் ஆனான்.

சத்தியத்துடன் நம்மை எதிர்கொள்ளும் துணிச்சலான நபர்களின் வார்த்தைக்கு நான் செவி சாய்க்கிறேனா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download