கண்ணீரால் நனைத்தவர்கள்

1. கண்ணீரால் அறையை நனைத்த எசேக்கியா 
1இராஜாக்கள் 20:2-3(1-6); ஏசாயா 38:5     எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப் புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான் எசேக்கியா மிகவும் அழுதான்.

2. கண்ணீரால் கட்டிலை நனைத்த தாவீது 
சங்கீதம் 6:6,8 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 42:3; சங்கீதம் 56:8; சங்கீதம் 80:5; சங்கீதம் 102:10

3. கண்ணீரால் உடலை நனைத்த யோபு 
யோபு 16:16,20      அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. என் சிநேகிதர் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.     

4. கண்ணீரால் கன்னங்களை நனைத்த நகரி (எருசலேம்) 
புலம்பல் 1:2 (1-10) இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளு டைய கண்ணீர் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக் குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை

5. கண்ணீரால் கால்களை நனைத்த மரியாள் 
யோவான் 12:3அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங் களைத் துடைத்தாள்; லூக்கா 7:38-44    யோவான் 11:2      

6. கண்ணீரால் சுருள்களை நனைத்த பவுல் 
2கொரிந்தியர் 2:4  நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன். கலாத்தியர் 6:11; பிலேமோன் 1:19       

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download