தலைவர்களின் தவறு

இந்தியாவில் ஒரு பகுதியில், இரண்டு சமஸ்தானங்கள் இருந்தன.  மிஷனரிகள் அந்தப் பகுதிக்கு வந்து, ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனையைத் தொடங்க அனுமதிக்க மன்னர்களிடம் அனுமதி கோரினர்.  ஒரு அரசன் அவர்களை நிராகரித்து, அவர்களின் எல்லையிலிருந்து துரத்தினான்.  மற்றொரு அரசன் அவர்களை வரவேற்று ஊழியம் செய்ய அனுமதித்தான்.  ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, மிஷனரிகளின் செய்தியை நிராகரித்த நகரம் ஒரு கிராமம் அளவு கூட இல்லை; வளர்ச்சியடைய வில்லை.  இப்போது வரை கூட உயர் கல்வி நிலையங்கள் இல்லை.  ஆனால் அந்த நகரத்தில் பல பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழில்துறை பகுதிகள் என வேலைவாய்ப்பும் உருவானது.  இன்று இது ஒரு வளமான, ஆற்றல்மிக்க மற்றும் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.

யெரொபெயாம்:
சாலொமோன் ராஜா தேவனுடனான தனது உறவிலிருந்து விலகி, அவருடைய கட்டளைகளை மறந்து, அவருடைய பல மனைவிகளால் சிலைகளை வணங்குவதில் மற்றும் அந்நிய தேவர்களைப் பின்பற்றுவதில் என தவறாக வழிநடத்தப்பட்டான் (1 இராஜாக்கள் 11:4). தேவன் தாவீதோடு உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தார்;  எனவே அவர் சாலொமோனின் மகன் ரெகொபெயாமின் ஆட்சியின் போது ராஜ்யத்தைப் பிரித்தார்.  அகியா யெரொபெயாமிடம் தீர்க்கதரிசனம் கூறியது போல் சமாரியாவில் ராஜ்யத்தை நிறுவினான் (1 இராஜாக்கள் 14:9).

அரசியல் அதிகாரம் சீரழிவு:
யெரொபெயாம் ஒரு விடாமுயற்சியும் ஆற்றல் மிக்க தலைவராக இருந்தான்.  அவன் கடவுளை விட தன்னையே சார்ந்திருந்தான். அவன் தனது ராஜ்யத்தை நிறுவி, தனது சந்ததியினர் என்றென்றும் ஆட்சி செய்ய விரும்பினான்.  எனவே, அவன் தாண் மற்றும் பெத்தேலில் மாற்று வழிபாட்டுத் தலங்களை உருவாக்கி, ஒவ்வொரு இடத்திலும் ஒரு தங்கக் கன்றுக்குட்டியை நிறுவினான், அதனால் அவனுடைய ராஜ்யத்தின் மக்கள் வழிபாட்டிற்காக எருசலேமுக்குச் செல்ல மாட்டார்கள் மற்றும் யூதாவின் ராஜா பக்கமும் போக மாட்டார்கள் என எண்ணினான் (1 இராஜாக்கள் 12:28-30).

மாற்று வழிபாடு:
யெரொபெயாம் தங்கக் கன்றுகளுக்கு மேலதிகமாக, கோவில்களைக் கட்டினான், ஆசாரியர்களை நியமித்தான் ஆனால் அவர்கள்  லேவியர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை (1 இராஜாக்கள் 12:31). யூத மதத்தின் பிரதியான விடுமுறைகள், பலிகள் மற்றும் பண்டிகைகளின் அமைப்பை அவன் நிறுவினான்.

மரபு:
யெரொபெயாமின் குடும்பத்தை தாவீதின் குடும்பத்தைப் போல ஆக்குவதாக தேவன் வாக்குறுதி அளித்தார், ஆனால் அவன் தன்னைத்தானே அழித்துக்கொண்டான், அவனுடைய குடும்பம் தூக்கியெறியப்பட்டது (1 இராஜாக்கள் 11:38; 13:34; 1 இராஜாக்கள் 14:11). அவனுடைய மாதிரியைப் பின்பற்றி இஸ்ரவேலின் எல்லா ராஜாக்களும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து அழிந்தார்கள்.  யெரொபெயாம் எப்படி அழிந்தான், நல்லடக்கம் செய்யப்படவில்லை என்பதை தேவன் காட்டினார்; வருங்கால ராஜாக்களை தேவன் எச்சரித்து நியாயந்தீர்த்தார்.

 மற்றவர்களின் வீழ்ச்சிக்கு நான் காரணமா?
Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download