நமக்குப் பெயர் உண்டாக்குவோம்!

நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம்! இந்த ஆசைதான் மக்களை ஏதாவது செய்ய தூண்டுகிறது. கின்னஸ் உலக சாதனை பதிவுகள் பல சாதனைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சில வேடிக்கையானவை மற்றும் நோக்கமற்றவை. மற்றவை தீவிரமானவை. நோவாவின் காலத்து பெரு வெள்ளத்திற்குப் பிறகு தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க விரும்பிய மக்களைப் பற்றி வேதாகமம் பதிவு செய்கிறது. (ஆதியாகமம் 11:1-9)

மத முயற்சி: வானத்தை அடையும் அளவுள்ள கோபுரங்கள் கொண்ட ஒரு நகரத்தை அவர்கள் உருவாக்க விரும்பினர். அதினால், மேகங்களுக்கு மேலே உள்ள இடத்தில் வசிப்பதாக அவர்கள் நம்பும் ‘கடவுள்’களுடன் தொடர்பில் இருக்க விரும்பினர்.

கட்டிடக்கலை சாதனை: மனித வரலாற்றில் முதல் வானளாவிய கட்டிடம் இது. நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள், துல்லியமான கருவிகள், திறன்கள் மற்றும் சாதங்கள் இல்லாமல், அவர்கள் அத்தகைய கோபுரத்தை கனவு காணவும், திட்டமிடவும் செயல்படுத்தவும் செய்தனர்.

அரசியல் சாதனை: அத்தகைய நகரத்தையும் கோபுரத்தையும் கட்டுவதன் மூலம், அவர்கள் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்தவர்களாகவும், மேலாதிக்கம் கொண்டவர்களாகவும் மாறுவார்கள்.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: நீர்த் தடுப்பு தொழில்நுட்பம் மூலம், வெள்ளம் மீண்டும் ஏற்பட்டால், அவைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ஒற்றுமை அறிக்கை: அவர்கள் ஒரு மொழியைப் பேசுவதாலும், அவர்களின் தகவல் தொடர்பு அமைப்பு திறமையாக இருந்ததாலும் அவர்கள் ஒற்றுமையாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்பினர்.

பெரும்பிழைகள்: முதலில், அவர்கள் தேவ சாயலில் இல்லாமல், தங்களுக்காக வாழவும், தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கவும் விரும்பினர். தேவனும், அவரது நோக்கமும் மற்றும் அவரது விருப்பமும் அவர்களுக்கு ஒவ்வாமற்போனது. இரண்டாவதாக, பூமியை நிரப்ப வேண்டும் என்ற கர்த்தரின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிய விரும்பவில்லை. (ஆதியாகமம் 1:28) அவர்கள் பரவிப்போவதற்குப் பதிலாக ஒன்றாக இருக்க விரும்பினார்கள். மூன்றாவதாக, தாலந்துகள், வரங்கள் மற்றும் திறமைகள் தங்களுக்கு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குவதற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன. தேவ மகிமைக்காக அதைப் பயன்படுத்த அவர்கள் விரும்பவில்லை. நான்காவதாக, பூமி முழுவதையும் மீண்டும் வெள்ளத்தால் அழிக்க மாட்டார் என்ற கர்த்தரின் உடன்படுக்கைக்கு அடையாளமாக வானவில்லைக் கொடுத்தும் அவர்கள் நம்பவில்லை.

தண்டனை: இந்த மனிதக் கலகம் கண்டு கர்த்தர் மனக்களிப்பாகவுமில்லை அல்லது திருப்தியடையவுமில்லை. அவர்களின் பெருமை தடுக்கப்பட வேணடியது. கர்த்தரின் நோக்கத்திற்கு மாறாக ஒரு பேரரசை உருவாக்குவார்கள். தேவன் தமது இறக்கத்தால் அவர்களை அழித்தொழிப்பதற்குப் பதிலாக அவர்களின் மொழியைத் தாறுமாறாக்கினார். ஒத்த மொழி பேசும் ஒவ்வொரு குழுவினரும் வெவ்வேறு திசைகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

மகத்தான பெயர்: கர்த்தர் ஆபிரகாமை அழைத்தார், அநேகமாக பாபேல் கோபுரத்தின் அருகே வாழ்ந்திருக்கலாம், மேலும் அவனுடைய பெயரைப் பொருமைப்படுத்துவேன் என்று வாக்குத்தத்தம் தந்து அவனை ஆசீர்வதித்தார். (ஆதியாகமம் 12:1-2)

நான் சுயம் தேடுகிறவனா அல்லது தேவனை கனம் பண்ணுகிற விசுவாசியா?

Author: Rev. Dr. J .N. மனோகரன்



Topics: Daily Devotions bible study Rev. Dr. J .N. மனோகரன்

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download